Saturday, September 29, 2012

ரசவாதம்


Gjphpid fz;ljha;
,ikfs; tpid kwf;f

thh;j;ijfs; CLUtpa
mjph;tpdhy;
,jo;fs; Jbf;f
nfhl;br; rpjwpa
mUk;gpd; Nfs;tpfsha;

Clyhy; rpy ehl;fs;
ciue;jpUe;j ciuahly;
caph;j;njOe;j rkak;
caph;ngw;W njwpf;fpwJ
cw;wtspd; thh;j;ijfs;

Foe;ijfspd; jhiaNa
Foe;ijahf;fp tpLfpwJ
$lypd; caph;g;G.

                   -kq;fsf;Fb eh.fiyaurd;-

பரிணாமம்



·         ,Urf;fu thfdj;ij
     ,af;fpaJ
     mlk;gpbj;J mOJ
     Kd; mkh;e;J rhjpj;jJ
     Kw;fhyk;
·         ghijia kiwg;gjha;
     tapw;NwhL iffshy;
     fl;baizj;jgb
     gpd;dhy; mkh;e;J
     gazpj;jJ
     fle;jfhyk;

·         rl;il ,ilg;gFjp
     ifapy; gl;Lk;
     glhkYkha;
     gazpj;jJ
     ,ilf;fhyk;

·         ,d;W..
     nehprypy; rpf;fp
     jLkhWk; epiyapy;
     Njhs;fis jl;b
     fpaiuf; Fiwj;J
     nkJtha; NghfyhNk
     vd;fpuhd; kfd;                                       
                                -kq;fsf;Fb eh.fiyaurd;-



























Wednesday, June 27, 2012

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இராமநாதபுரம் மாவட்டக்குழு சி.பி.எம்.மாவட்ட அலுவலகம், குட்செட்ரோடு-இராமநாதபுரம். அனுப்புநர் நா.கலையரசன் மாவட்டத் தலைவர் பெருநர். உயர்திரு. துலைமை செயலாளர் அவர்கள் தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் சென்னை – 600 009. ஐயா, இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகா இராமநாதபுரத்திற்கு அருகேயுள்ள புத்தேந்தல் கிராமத்தில் 31.05.2012 அன்று நடைபெற்ற தங்களது உறவினர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தியாகி இமானுவேல் சேகரம் படம் வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை தலித் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டு அன்று இரவே கிழித்தெறியப்பட்டதுடன் 01.06.2012 அன்று குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமூக மக்களை இழிவு செய்தும் எழுதி வைத்துள்ளனர். இதற்கு நியாயம் கேட்டு யாதவ சமூக கிராம தலைவர்களைச் சந்திக்கச் தலித் மக்கள் சென்றபோது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி ஒரு பெண் உள்பட 4 தலித் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டு ஒருவர் மதுரை அப்போலோவிலும் மற்றவர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த பிரச்சனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு வந்ததும் 02.06.2012 அன்று புத்தேந்தல் கிராமத்திற்கு சென்று விசாரித்தோம். பிறகு சம்பந்தப்பட்ட இராமநாதபுரம் பி.1 காவல்நிலையத்திலும் நடந்தது குறித்து விசாரித்த பிறகு புத்தேந்தல் பிரச்சனை சாதி ஆதிக்க வெறியுடன் நடந்துள்ளது என்றும் தலித் மக்;கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரச்சனையின் துவக்கம் அதன் தன்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல் வழக்கு பதிவு செய்துள்ளது எனும் முடிவிற்கு வந்து மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை சந்திக்க முயற்சித்தோம். 2-ம் தேதி மாலை சந்திப்போம் என்றவர் 3.6.2012 மாலை வரை தொடர்ந்து முயன்றும் சந்திக்க முடியாததால் 4.6.12 அன்று அவருக்கான மனுவை கூரியர் தபாலில் அனுப்பி வைத்தோம். அதன் பிறகு 21.06.2012அன்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை புத்தேந்தல் பிரச்சனையை எஸ்சி.எஸ்டி பிரிவில் வழக்கு பதியவில்லை. மேலும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மக்கள் மீதான வழக்கினை வாபஸ் பெறவில்லை என்பதுடன் பிரச்சனையில் தொடர்பில்லாதவர்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பார்க்க வந்த பாலிடெக்னிக் மூன்றாமாண்டு மாணவன் கவியரசுவையும் மற்றும் உறவினர்களையும் கைது செய்தது மட்டுமின்றி காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளது அதிச்சியானதாகும். தியாகி இமானுவேல் சேகரன் படம் போட்டதற்காகவே பிளக்ஸ் போர்டு கிழிக்கப்பட்டதும், குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமூக மக்களை இழிவு செய்து எழுதி வைத்ததும் தான் பிரச்சனைக்கு காரணம். போர்டு வைக்கும் போதெல்லாம் இப்படியான அராஜகம் தொடர்கிறது. மேலும் பிரச்சனைக்குப் பிறகு இனிமேல் ஒரு பள்ளப்பயலும் இங்கவந்து பஸ் ஏறக்கூடாது, ஏறினா ஊரோட நெருப்பு வச்சு கொழுத்திடுவோம் என வெறியாட்டம் போட்டுள்ளனர். இவை அனைத்தும் ஜாதி ஆதிக்க வெறியுடன் நடத்தப்பட்டவை. ஆனால் சரக காவல் துறை அதிகாரிகளோ போர்டை யாரைகேட்டு வைத்தீர்கள் என தலித் மக்களை மிரட்டியதுடன் பெண்களை இழிவாக பேசியதுமான நடவடிக்கையில் இறங்கியது அதிர்ச்சியானதாகும். மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பிறகு தலித் ஊராட்சி தலைவரை தங்கள் கைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ஊரின் கண்மாயில் மீன் பிடித்தபோதும் , நூறுநாள் வேலைக்கான பணியிடம் பிரிக்கப்படும் போதும் உங்களோட ஒன்னா வேலைப்பார்க்க அவங்க முடியாதுங்கறாங்க அதனால எஸ்சி எல்லாம் அந்த பக்கம் வேலை பாருங்க எனப் பிரித்து தருவது தீண்டாமையின் ஒரு பகுதிதான் . அதையும் அரசு திட்டத்திலேயே தலித் ஊராட்சி தலைவரை வைத்தே நடைமுறைப் படுத்துகிற அவலம் நடைபெற்று வருகிறது. மேலும் ஏற்கனவே ரேசன் கடை செயல்பட்டுவந்த கட்டிடம் பழுதானதால் தற்காலிக ஏற்பாடாக தலித் ஒருவரது வீட்டில் நான்காண்டு காலமாக ரேசன் கடை செயல்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட பிரச்சனைக்கு பிறகு அந்த ரேசன்கடை யாதவர் குடியிருப்பிற்குள்ளே இடம் மாற்றப்படுகிறது. ஏன் இப்படி என்று கேட்டால் இங்கே கடை இருந்தால் யாதவ மக்கள் வரமாட்டோம் என்கிறார்கள் எனவே தற்காலிகமாகத்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறோம் என்கிறார்கள் அதிகாரிகள். அப்படி மாற்றப்பட்டபிறகு தலித் மக்கள் வரமாட்டோம் என்றால் என்ன செய்வது. எனவே அரசு இயந்திரத்தையே சாதி ஒடுக்குமுறைக்கு உதவியாக பயன் படுத்துகிற இந்த தந்திரம் ஆபத்தானதாகும். எனவே தாங்கள் தலையிட்டு பிரச்சனையின் தன்மை அடிப்படையில் இந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் , பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கிடவும், அரசுத் திட்டங்களிலேயே தீண்டாமையை அமல்படுத்துகிற போக்குகளையும் தடுத்து நிறுத்தி, உரிய முறையில் தலையிட்டு நியாயம் கிடைக்க உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். உண்மையுள்ள (நா.கலையரசன்) மாவட்டத்தலைவர்


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இராமநாதபுரம் மாவட்டக்குழு
சி.பி.எம்.மாவட்ட அலுவலகம், குட்செட்ரோடு-இராமநாதபுரம்.

அனுப்புநர்
    நா.கலையரசன்
    மாவட்டத் தலைவர்

பெருநர்.
    உயர்திரு. துலைமை செயலாளர் அவர்கள்
    தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்
    சென்னை – 600 009.
ஐயா,
    இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகா இராமநாதபுரத்திற்கு அருகேயுள்ள புத்தேந்தல் கிராமத்தில் 31.05.2012 அன்று நடைபெற்ற  தங்களது உறவினர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தியாகி இமானுவேல் சேகரம் படம் வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை தலித் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டு அன்று இரவே கிழித்தெறியப்பட்டதுடன்  01.06.2012 அன்று குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமூக மக்களை இழிவு செய்தும்  எழுதி வைத்துள்ளனர். இதற்கு நியாயம் கேட்டு யாதவ சமூக  கிராம தலைவர்களைச் சந்திக்கச் தலித் மக்கள் சென்றபோது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி ஒரு பெண் உள்பட 4 தலித்  மக்கள் கடுமையாக தாக்கப்பட்டு ஒருவர் மதுரை அப்போலோவிலும் மற்றவர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த பிரச்சனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு  வந்ததும் 02.06.2012 அன்று புத்தேந்தல் கிராமத்திற்கு சென்று விசாரித்தோம். பிறகு சம்பந்தப்பட்ட இராமநாதபுரம் பி.1 காவல்நிலையத்திலும் நடந்தது குறித்து விசாரித்த பிறகு புத்தேந்தல் பிரச்சனை சாதி ஆதிக்க  வெறியுடன் நடந்துள்ளது என்றும் தலித் மக்;கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரச்சனையின் துவக்கம் அதன் தன்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல் வழக்கு பதிவு செய்துள்ளது எனும் முடிவிற்கு வந்து மாவட்ட காவல்துறை  துணைக் கண்காணிப்பாளரை சந்திக்க முயற்சித்தோம். 2-ம் தேதி மாலை சந்திப்போம் என்றவர் 3.6.2012 மாலை வரை தொடர்ந்து முயன்றும் சந்திக்க முடியாததால் 4.6.12 அன்று அவருக்கான மனுவை கூரியர்  தபாலில் அனுப்பி வைத்தோம். அதன் பிறகு 21.06.2012அன்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை புத்தேந்தல் பிரச்சனையை எஸ்சி.எஸ்டி பிரிவில்  வழக்கு பதியவில்லை. மேலும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மக்கள் மீதான வழக்கினை வாபஸ்  பெறவில்லை என்பதுடன் பிரச்சனையில் தொடர்பில்லாதவர்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பார்க்க வந்த பாலிடெக்னிக் மூன்றாமாண்டு மாணவன் கவியரசுவையும் மற்றும் உறவினர்களையும் கைது செய்தது மட்டுமின்றி காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளது அதிச்சியானதாகும்.
    தியாகி இமானுவேல் சேகரன் படம் போட்டதற்காகவே பிளக்ஸ் போர்டு கிழிக்கப்பட்டதும், குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமூக மக்களை இழிவு செய்து எழுதி வைத்ததும் தான் பிரச்சனைக்கு காரணம். போர்டு வைக்கும் போதெல்லாம் இப்படியான அராஜகம் தொடர்கிறது. மேலும் பிரச்சனைக்குப் பிறகு இனிமேல் ஒரு பள்ளப்பயலும் இங்கவந்து பஸ் ஏறக்கூடாது, ஏறினா ஊரோட நெருப்பு வச்சு கொழுத்திடுவோம் என வெறியாட்டம் போட்டுள்ளனர்.
    இவை அனைத்தும் ஜாதி ஆதிக்க வெறியுடன் நடத்தப்பட்டவை. ஆனால் சரக காவல் துறை அதிகாரிகளோ  போர்டை யாரைகேட்டு வைத்தீர்கள் என தலித் மக்களை மிரட்டியதுடன் பெண்களை இழிவாக பேசியதுமான நடவடிக்கையில் இறங்கியது அதிர்ச்சியானதாகும்.
    மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பிறகு தலித் ஊராட்சி தலைவரை தங்கள் கைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ஊரின் கண்மாயில் மீன் பிடித்தபோதும் , நூறுநாள் வேலைக்கான பணியிடம் பிரிக்கப்படும் போதும் உங்களோட ஒன்னா வேலைப்பார்க்க அவங்க முடியாதுங்கறாங்க அதனால  எஸ்சி எல்லாம் அந்த பக்கம் வேலை பாருங்க எனப் பிரித்து தருவது தீண்டாமையின் ஒரு பகுதிதான் . அதையும் அரசு திட்டத்திலேயே தலித் ஊராட்சி தலைவரை வைத்தே நடைமுறைப் படுத்துகிற அவலம் நடைபெற்று வருகிறது.
    மேலும் ஏற்கனவே ரேசன் கடை செயல்பட்டுவந்த கட்டிடம் பழுதானதால் தற்காலிக ஏற்பாடாக தலித் ஒருவரது வீட்டில் நான்காண்டு காலமாக ரேசன் கடை செயல்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட பிரச்சனைக்கு பிறகு அந்த ரேசன்கடை யாதவர் குடியிருப்பிற்குள்ளே இடம் மாற்றப்படுகிறது. ஏன் இப்படி என்று கேட்டால் இங்கே கடை இருந்தால் யாதவ மக்கள் வரமாட்டோம் என்கிறார்கள் எனவே தற்காலிகமாகத்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறோம் என்கிறார்கள் அதிகாரிகள். அப்படி மாற்றப்பட்டபிறகு தலித் மக்கள் வரமாட்டோம் என்றால் என்ன செய்வது. எனவே அரசு இயந்திரத்தையே சாதி ஒடுக்குமுறைக்கு உதவியாக பயன் படுத்துகிற இந்த தந்திரம் ஆபத்தானதாகும்.
    எனவே தாங்கள் தலையிட்டு பிரச்சனையின் தன்மை அடிப்படையில் இந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் , பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கிடவும், அரசுத் திட்டங்களிலேயே தீண்டாமையை அமல்படுத்துகிற போக்குகளையும் தடுத்து நிறுத்தி, உரிய முறையில் தலையிட்டு நியாயம் கிடைக்க உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
                                உண்மையுள்ள

                                (நா.கலையரசன்)
                                மாவட்டத்தலைவர்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இராமநாதபுரம் மாவட்டக்குழு
சி.பி.எம்.மாவட்ட அலுவலகம், குட்செட்ரோடு-இராமநாதபுரம்.

அனுப்புநர்
    நா.கலையரசன்
    மாவட்டத் தலைவர்

பெருநர்.
    உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
    இராமநாதபுரம் மாவட்டம்
    இராமநாதபுரம்
ஐயா,
    கடந்த 31.05.2012 அன்று இராமநாதபுரம் அருகிலுள்ள புத்தேந்தல் எனும் கிராமத்தில் தங்களது உறவினர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தியாகி இமானுவேல் சேகரம் படம் வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை தலித் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டு அன்று இரவே கிழித்தெரியப்பட்டுள்ளது. மேலும் ஊருக்குள் உள்ள குருசாமி கோவில் சுவற்றில்  பள்ளர் சமுதாயத்தை இழிவு செய்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த தலித் இளைஞர்கள் ஊர் தலைவர்களிடம் நியாயம் கேட்க சென்ற போது யாதவ இளைஞர்கள் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு ஒருவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலும் மற்றும் ஒரு பெண் உள்பட  3 பேர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தலித் மக்களை தாக்கியவர்கள் மீது எஸ்சி.எஸ்டி பிரிவில் வழக்கு தொடர வேண்டும் எனவும் தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புத்தேந்தல் தலித் மக்களோடு இணைந்து கோரிக்கை வைத்து போராடி வரும் நிலையில் புத்தேந்தல் கிராமத்தில் தலித் மக்களை தனிமைப் படுத்தும் முயற்சியில் யாதவர்கள் முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதற்கு தலித் ஊராட்சி தலைவரையே கருவியாக பயன்படுத்துகிற தந்திரமும் கையாளப்படுகிறது. அரசு திட்டமான மகாத்மாகாந்தி ஊரக வேலைத்திட்டத்தில் பணி செய்ய சென்ற தலித் மக்களை தனியாக பிரித்து எஸ்சி-க்கள் தனியாக வேலை பாருங்கள் உங்களோடு சேர்ந்து அவங்க வேலைசெய்ய மாட்டேங்கிறாங்க என ஊராட்சித் தலைவரே சாதி பிரிவினை செய்து பணி இடம் ஒதுக்கி வருகிறார். இது ஒருவகை தீண்டாமைதான்  தலித் ஊராட்சி தலைவரை வைத்தே இதை செய்கிற தந்திரத்தை கையாள்வது சகிக்க முடியாதது . மேலும்  ஊர் கண்மாயில் மீன்பிடிக்கிற போதும் இதே முறையை கையாண்டு இருக்கிறார்கள். இது ஏற்க்க முடியாத சாதி வெறியென கருதுகிறோம் . அத்துடன் புத்தேந்தலுக்கான ரேசன்கடை புத்தேந்தல் கிராமத்தில் பள்ளிகூடம் அருகே நடந்து வந்தபோது கட்டிடம் இடியும் நிலை ஏற்பட்டதால் தற்காலிகமாக அருகிலிருந்த ஒரு தலித்தின் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட பிரச்சனைக்கு பிறகு அந்த கடையை யாதவ குடியிருப்பிற்குள்ளேயே வைத்திட தாசில்தார் ஏற்பாடு செய்வதும் அங்கே கடை இருந்தால் இவர்கள் வந்து வாங்க மாட்டார்கள். எனவே இது தற்காலிக ஏற்பாடுதான் என வட்டாட்சியரே சமதானம் சொல்வதும் ஒரு தீண்டாமையை நியாயப் படுத்துவதற்கே உதவும் என   கருதுகிறோம். அவர்கள் வரமாட்டார்கள் என கடையை மாற்றினால் இந்த கடைக்கு தலித்கள் போக மறுத்தால் என்ன செய்வது . போனால் போகட்டும் என்பதா? எனவே இது சரியானதாக படவில்லை. எனவே தாங்கள் தலையிட்டு அரசின் திட்டங்களிலேயே சாதி பாகுபாடு , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திடவும், எந்த வடிவத்திலும்  சாதி பாகுபாடு தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
                            தங்கள் உண்மையுள்ள
                               நா.கலையரசன்
                              மாவட்டத்தலைவர். 

Monday, June 25, 2012

அடையாளம் மீட்டெடுக்க தடைபோடும் சாதி வெறி...

கடந்த 1.6.12அன்று புத்தேந்தலில் ப்ளக்ஸ் போர்டை கிழித்தது குறித்த பிரச்சனையில் யாதவ இளைஞர்கள் சிலரால், தலித் இளைஞர்கள், ஒருபெண் உள்பட கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் .
    இப்படியொரு பிரச்சனை உத்திரகோசமங்கை அருகில் உள்ள நல்லிருக்கை கிராமத்திலும் நடந்துள்ளது. இது காவல்துறையின் கருணைமிக்க !!! நடவடிக்கையினால் சமரசம் ஏற்பட்டுவிட்டது.
    புத்தேந்தல் பிரச்சனையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தலையிட்டதால் வழக்கு போராட்டம் என மாறியுள்ளது. மனித உரிமை ஆணயம் வரை கொண்டு  செல்லப்பட்டுள்ளது.
    ப்ளக்ஸ் போடு வைப்பதிலெல்லாம் ஏன் பிரச்சனை வரவேண்டும் ஊரில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ப்ளக்ஸ் போடு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. சடங்கு மற்றும் இரங்கல், விளம்பரம் கூட சொல்பவரின் புகைப்படத்துடன் வைக்கப்படுகிறது. இது தன்னை முன்னிருத்திக்கொள்ளும் ஊருக்கு தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் , அடையாள அரசியல், பின் நவீனத்துவம் போட்ட குட்டி இது. எல்லோரையும் பேயாய் பிடித்துக்கொண்டது.
    இதில் நாம் அவதானிக்க வேண்டியது ஊரே கைக்கொண்ட பழக்கத்தினை தலித்துகள் கை கொண்டால் மட்டும் பிரச்சனையாவது ஏன்..? சினிமா நடிகர்கள் படம் போடப்படும் போர்டுகள் வைக்கலாம் , ஆனால் ஒரு சமூகம் தனது அடையாளமாகக் கருதும் ஒரு தலைவரின் படத்தைப் போட்டால் மட்டும் ஏன் சிலருக்கு பிடிக்காமல் போகிறது.
    எந்தப் பக்கம் திரும்பினாலும் மறவர் கோட்டையில் மணவிழா , மருது கோட்டையில் மணவிழா, கோகுலத்தில் திருமணம் என ப்ளக்ஸ்  போடுகளை வைத்து கர்வம் கொள்ளும் போது இமானுவேல் சேகரன்  கோட்டையில் திருமணம் என்றோ, ஒண்டிவீரன் கோட்டையில் திருமணம் என்றாலோ எவர் கட்டிய கோட்டையோ இடிந்து விழுந்ததாய் ஏன் இந்த ஆவேசம்.    தலித்துக்கள் அடையானம் பெருகிறார்களே எனும் ஆத்திரம் தான். ஏனெனில் இவர்கள் அடையாளம் பறிக்கப்பட்டவர்கள் .
மநு எனும் மனநோயாளியின் சதியால் சாதி திணிக்கப்பட்டு வருணங்களுக்குள் கூட அடையாளம் மறுக்கப்பட்டு பஞ்சமர் என படியிரக்கப்பட்டு இழிவுக்குள்ளாயினர். உணவு, உடை உறைவிடம்  என எந்த உடமையும் இல்லாதவர்களாக்கி சேவைச்சாதி என பெயர் சூட்டினர். அதை பெருமையென அந்த மக்களையே நம்பிட வைக்க கடவுள்களையும் , புராணங்களையும் பயன்படுத்திக்கொண்டனர்.
அந்த மக்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகளை , அடக்குமுறைகளை கண்டு கொதித்துப்போன மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் உயர்சாதியினர்  என அடையாளமிடப்பட்ட  முற்போக்காளர்கள் கடுமையாக எதிர்த்தனர் . போராடினர். அந்த மக்களை போராடிட  தூண்டினர்.  அந்தப் போராட்டக் களத்தில் அந்த மக்களிடமிருந்தே அரும்பெரும் தலைவர்கள் உருவாகி வலம் வந்தனர்.
    அறிவும் ஆற்றலும் எந்த சாதியில் பிறக்கிறோம் என்பதல்ல வாய்ப்புக் கிடைத்தால் அறிவுருவானவர்கள் என தனக்குத்தானே பெயரிட்டுக்கொண்ட அந்தணர்களுக்கே அறிவில் அப்பனாக முடியும் என அகிலம் அறிய உயர்ந்து நின்றார் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார். அவர் வழியில் இன்று அறிவுத்துறையில ஆயிரமாயிரமாய் அணிவகுத்து வருகிறார்கள்.
    இது ஆயிரமாயிரமாண்டு போராட்டத்தின் விளைவு. பலதலைமுறைகளின் தியாகம்  இந்த உருமாற்றம் தான் உயர்சாதியென்போரை ஆத்திரப்படவைக்கிறது. அவர்கள் சுயமாய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தடுக்க நினைக்கிறார்கள். கடந்த காலத்திலேயே இருத்தி வைக்க நினைக்கிறார்கள். அதனால்தான்  அவர்கள் அடையானம் புனைவதை சகித்துக் கொள்ள முடியாமல் சதி செய்கிறார்கள்.
    அதன் வெளிப்பாடுதான் தலித் தலைவர்களின் படம் ப்ளக்ஸ் போர்டில் வரையப்படும் போது பிரச்சனைகளை வளிந்து உருவாக்குகிறார்கள். அதுதான் புத்தேந்தலில் நல்லிருக்கை என  தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த  சாதிச்சாக்கடையை படித்தவர் , படிக்காதவர் எனும் பாகுபாடின்றி தலையில் ஊற்றிக் கொண்டு ஊர்வலம் வருகிறார்கள்.
    இது அவர்களின் தவறு அல்ல, அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாய் கைமாற்றித்தரப்பட்டு வருகிறது. தங்களுக்கு கீழே ஏவல் பணி செய்ய ஒரு சாதியெனும் போது பெருமிதப்படும் (இது தலித் பிரிவுக்குள்ளும் உள்ளது) குணம் அவர்களின் மண்டைக்குள் ஊறிக்கிடக்கிறது.அந்த உணர்வு எவ்வளவு படித்து பதவியில் இருந்தாலும் தொடர்கிறது.
காவல்துறையில் இது பகிரங்கமாக வெளிப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அருகாமை உதாரணம் பரமக்குடி துப்பாக்ச்சூடு.
புத்தேந்தல் பிரச்சனையிலும் அதே முறையில்தான் செயல்பட்டுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரிடம்  வாக்குமூலம்  வாங்கி புகார் பதிவு செய்யும் போதே எஸ்.சி, எஸ்.எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யாமல் கோஷ்டி தகறாராய் வருணித்து இரு பகுதிக்கும் வழக்கு பதிவு செய்துள்ளது. அதோடும் அவர்களின் திருவிளையாடல் முடியவில்லை. பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் யாரைக்கேட்டு போர்டு வைத்தாய் , வைத்தால் பாதுகாப்புக்கு ஏன் ஆள் போடவில்லை என மிரட்டியுள்ளது. பிற சாதித் தலைவர்கள் படம்போட்டு வைத்த திருமண போர்டுகளுக்கு காவல் போடு என காவல்துறை கேட்க்குமா..? கேட்காது..முடியாது.
    இது மட்டுமல்லாமல் பெண்களை இழிவாகப் பேசி மிரட்டி கைது செய்தவர்களை காவல் நிலையத்திலேயே  வைத்து அடித்து உதைத்துள்ளனர்.  இவை எதுவும் இந்த மக்களை தாக்கிய யாதவர்கள் மீது கையாளப்படவில்லையே  ஏன்...? உயர் சாதியென்போரின் வன்கொடுமை குறித்து காவல் துறையில் புகார் தந்தால் காவல்துறையும் வன்கொடுமை செய்கிறது. புகார், போராட்டம் என நடத்திய பிறகும் எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்கு பதியவில்லை, மாநில அமைச்சர்கள் சட்ட சபையிலேயே தமிழகத்தில் தீண்டாமையே  இல்லையென பொய்யாய் அறிவித்ததை போலீஸ் உண்மையாக்க முயல்கிறது. அதனால்தான் தெருநாயை யார் வேண்டுமானாலும் கல்விட்டு எரியலாம் என்பது போல தலித்துகளை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் கேள்வி கேட்பாடில்லை இதுதான் 21-ம் நூற்றாண்டுகளிலும் தொடரும் என்றால் ஒரு நாட்டிற்கு இதை விட இழிவு வேறு ஏதும் தேவையில்லை.
    ஆனால் அனைத்து சமூகம் மற்றும் அனைத்து அரசு துறைக்குள்ளும்  இந்த அநீதி களைந்தெறியப்படவேண்டும்  என நினைப்போரும் உள்ளனர் என்பதுதான் ஆறுதலான நிகழ்வு - இவர்களையும் இணைத்துக் கொண்டுதான் இந்த சாதி ஆதிக்க குணத்தை – தீண்டாமை கொடுமையை வேரறுக்க முடியும். அடையாளத்திற்காக அரசியல் என்பதற்கு மாறாக அரசியலை தொழிலாளி வர்க்க அடையாளத்துடன் சந்திப்போம்  அதுவே சாதி ஒடுக்குமுறைக்கு எதிராய் சரித்திரம் படைக்க பயன்படும். அதுவரை இடைவிடா போராட்டம் தொரடப்பட வேண்டும்.
                                                          -    மங்களக்குடி நா.கலையரசன -

Saturday, June 23, 2012

பரமக்குடி துப்பாக்கிச்சூடு பதிலில்லா பல கேள்விகள்.


       
nrg;lk;gh; 11-jpahfp ,khDNty; Nrfud; epidT jpdj;jd;W fhty;;;Jiw elj;jpa nfhiyntwp Jg;ghf;fpf;R+l;by; 6 jypj; kf;fs; nfhiy nra;ag;gl;l nfh^uk; ele;J  xU khjk; Mfg;NghfpwJ. jkpof muR ,e;jg; gpur;ridapy; ngUk; nksdj;ijNa filgpbj;J tUfpwJ. nfhiyahdth;fs; FLk;gq;fSf;F xU yl;rk; &ghiaAk;> xU egh; fkprd; xd;iwAk;  mikj;J tpl;lNjhL gpur;rid Kbe;J Ngha; tpl;lJ vd fUJfpwhh;fs; NghYk;.
    jq;fs; r%fj;jpd; kPjhd mlf;FKiwfis jLf;f Kbahj > mbg;gilg; gpur;ridfisf;$l jPh;f;fhj > kpfg;ngUk; Coy; Kiw NfLfspy; Cwpj;jpisj;j jp.K.f. muir khw;wpl ePz;l ,ilntspf;Fg; gpwF fle;j rl;lrigf;fhd Njh;jypy; m.jp.K.f-it Mjhpj;J thf;fspj;j kf;fs;> r%f xLf;FKiw  vjph;g;G Nghuhl;lj;jpd; milahskha; fUJk; jq;fs; jiyth;  ,khDNty; Nrfud; FUG+i[ia  rpwg;ghf elj;jpf; fhl;b muNr ,e;j tpohit Vw;W elj;jpl Nfhhpf;if itg;gJ vd;W ,e;j Mz;L mikjpahf tpohit elj;jpl Kad;w NjNte;jpuFy kf;fspd; ek;gpf;ifia rPh;Fiyj;J me;j tpohitNa Aj;jf;fskha; khw;wp> Jg;ghf;fpr;R+L  elj;jp 6 jypj;Jfis nfhiy nra;J jPuhj fsq;fj;ijr; Rke;J nfhz;lJ m.jp.Kf muR .
    ,j;jid caph; gypfs; ele;j gpwFk; jdJ nghUg;gpy; cs;s fhty;Jiwia ghJfhf;Fk; Nehf;fj;jpy;> fKjp jhYfh vk;.gs;sgr;Nrhp fpuhkj;ijr; Nrh;e;j khztd; godpf;Fkhhpd;  gLnfhiyNahL njhlh;Gg;gLj;jp mjw;F xU fhuzj;ijr;nrhy;yp ele;j nfhLikf;F rhjpf; fytuKyhk;  G+r Kjy;th; Kad;wJ mjph;r;rpahdJ. 9.9.11 md;W godpFkhhpd; gLnfhiy ele;jJ.  10-k;Njjp  KOtJk; NjNte;jpu Fy kf;fs; jpul;rpaha; thOk; gFjpfspy; $l ve;j rpW mrk;ghtpjq;fSk; eilngwhj epiyapy; ,e;j Jg;ghf;fpr;R+L vk;.gs;sgr;Nrhp  khzthpd; gLnfhiyAldhd njhlh;r;rp vd rl;lkd;wj;jpNyNa  Kjy;th; n[ayypjh NgrpaJk;> mth; $wpa RtnuOj;Jg; gpur;rid kz;ly khzpf;fj;jpw;F mUNfAs;s fpuhkq;fSf;Nf njhpahj epiyapy; cyfNk mwpa cuj;J Ngrpajw;Fk; NtW VJk; fhuzk; ,Uf;FNkh vd;fpw re;Njfq;fis gpw r%fq;fis Nrh;e;j eLepiyahsh;fNs tpthjpf;Fk; epiy Vw;gl;Ls;sJ.

    ele;J Kbe;J Nghd ,e;j nfhiy ghjf epfo;Tf;F fhty;Jiw nrhd;d fhuzk;  [hd;ghz;bad; ifJ> vjw;fhf mtiu ifJ nra;a Ntz;Lk;. mth; Kfit khtl;lj;jpw;Fs; te;jhy; fytuk; Vw;gl;L tpLk;. mijj;jLf;f vd;whh;fs;. [hd; ghz;bad; ifJ nra;ag;gl;l ty;yehl;bw;F  tUtjw;FKd; Jhj;Jf;Fb ney;iy-khtl;lq;fspy; rpy epfo;r;rpfspy; fye;J nfhz;Ltp;l;Lj;jhd; te;Js;shh;.  me;j gFjpfspy; fytuk; VJk; ele;jjha; nra;jp VJk; ,y;iy> Mdhy; mtiu ifJ nra;Jtpl;L gukf;Fbapy; fhty; JiwapdNu jq;fspd; euNtl;ilia elj;jp Kbj;jdh;.

    ,e;j rk;gtk; mr;rj;ij Vw;gLj;Jtjhf cs;sJ. xU fl;rpapd; jiytiu MSfpw muR epidj;jhy; me;j CUf;F NghfhNj. ,e;j epfo;r;rpf;F NghfhNj vd jil Nghl KbAk; kPwp mth; nrd;Wtpl;lhy; vd;d MtJ vd Kd; ifJ nra;ayhk; vd;gJk;  jq;fs; mikg;gpd; jiytiu tpLjiy nra; vd njhz;lh;fs; Nghuhbdhy; ve;j rl;l newpKiwAk; ,d;wp Jg;ghf;fp R+L elj;jp nfhd;W Ftpg;gJk; ve;j tif [dehafk;?.  
    Gukf;Fbapy;jhd; Nghuhbdhh;fs;. kJiu rpe;jhkzp> ,isahd;Fb Nghd;w ,lq;fspy; xNu rkaj;jpy; Jg;ghf;fp R+L elj;jpaJ vjw;fhf? ,J cs; Nehf;fj;Jld; fhty;Jiw jpl;lkpl;L elj;pa nfhiyntwpj;jhz;ltk; vd caphfis gwpnfhLj;jth;fspd; cwTfs; vOg;Gk; re;Njfj;jpw;F vtUk; gjpy; jutpy;iy. Jg;ghf;fpr;R+L elj;jpl cj;jutpl;lth; ahh; vd ,Jtiu ahUNk nrhy;yhjJ kh;kkhAs;sJ.
    ghJfhg;gpw;fhf vDk; ngahpy; gy fhty;Jiw caujpfhhpfs; Mapuf;fzf;fpy; fhtyh;fs; gilNahL  ,Ue;Jk; 50 Ngh;  elj;jpa kwpaiyf; ifahs Kbahky;  NghdJ jkpof fhty;Jiwapd; jpuid Nfs;tpf;Fwpajha; Mf;fpAs;sJ.
    jq;fspd; gyfPdq;fis kiwf;f khtl;lk; KOikf;Fk; 144 jil Mizia mKyhf;fp 1400 NgUf;F Nky;  ngha; tof;F gjpT nra;J ,uT Njly; vDk; ngahpy; NjNte;jpuFy kf;fs; thOk; midj;J fpuhkq;fspYk; mj;JkPwp Eioe;J ntwpahl;lk; Nghl;lJk; > ngz;fsplk; mehfhPfkha; ele;J nfhz;lJk; nfhLikapd; cr;rk;.
    ,e;j mr;RUj;jYf;F gae;J Mz;fs; ,uT Neuq;fspy; fhLfspy; gJq;fp cwq;fpaJk; ,jpy; tprg;G+r;rp kw;Wk; ghk;Gfs; fbj;J kUj;Jtk; ghh;f;Fk; nfhLikAk; ,jpy; xUth; ,we;;J Nghd JauKk; epfo;e;jJ. gpur;ridia  jPtpukhf;fpaJ. khh;f;rp];l; fk;A+dp];l; fl;rp jPz;lhik xopg;G Kd;ddp cs;spl;l murpay;fl;rpfs; kw;Wk; r%f mikg;Gfspd; fz;ldk; kw;Wk; cs;shl;rp Njh;jy; Njjp mwptpf;fg;gl;l epiyapy; 144 jil Miz > ,uTj;Njly; iftplg;gl;lhYk; 1400 Ngh; kPjhd tof;F mr;r%l;LfpwJ.
    nrg;lk;gh;-11  Jg;ghf;fpr;R+L ele;jJk; 13-k; Njjp jkpo;ehL jPz;lhik xog;G Kd;ddp 
15-k;Njjp khh;f;rp];l; fk;A+dp];l; fl;rpapd; rl;lkd;w cWg;gpdh; FO 21-k; Njjp cjtp epjp jyh 25>000 toq;fp MWjy; $w te;j khh;rp];l;fk;A+dp];l; fl;rpapd; khepyr; nrayhsh; [p.,uhkfpU];zd; MfpNahNuhL nrd;w NghJk; 2.10.11 md;W gukf;Fbapy; eilngw;w fz;ld Mh;g;ghl;lj;jpy; fye;J nfhz;lNghJk;> nfhLkYhh; tPuk;gy; rilaNdhp gy;yhd;tyir> kQ;R+h; fhf;fNde;jy; fpuhk kf;fs; ele;j nfh^ukhd epfo;r;rpapd; mjph;r;rp ePq;fhj  gy Nfs;tpfis Kd; itj;jdh; . mJ kdij cYf;fpaJ.
·        m.jp.K.f-Tf;F Xl;L Nghl;L Ml;rpf;F nfhz;L te;jjw;F  mtq;f jh;u ghpR ,Jjhdh?
·        Rhjpg;ngauhy mbthq;fu vq;fs rh;f;fhNu mbf;fpwJ epahakh?
·        ViofNshl capUf;F tpiy 1 yl;rk; jhdh?
·        Rl;Lf; nfhd;dtq;f Nuhl;Ly jphpaug;Ngh ehq;f kl;Lk; vg;g ifJ nra;thq;fNshD gjl;lj;Njhl jphpANuhNk. nfhd;dtq;fSf;F jz;lid VJk; ,y;iyah..?
cs;sq;fis ciwa itj;j ,e;j Nfs;tpfSf;F jkpof muR gjpy; nrhy;Ykh? Gjpy; nrhy;y Ntz;Lk;> nrhy;Yk;gb  itf;f Ntz;Lk.

                 eh.fiyaurd;> khtl;lj;jiyth;
                 jPz;lhik xopg;G Kd;dzp - Kfit

கடவுளர்கள்.....


அடிவயிறு இறுகப் பிடித்து
 நிமிரத் திணறி                 
உமிழ் உறைந்து,                 
 ஈரம் சுரக்க ஏங்க                   
தொண்டைக்குழி வறண்டு                   
கருவிழி ஒளியை                   
புகைத்திரை மறைக்க                   
புவிவிசை எதிர்க்க                   
உடல்விசை மறுக்க                  
 சிறுசிறு துளியாய்
 உறுகும் உயிரை
 பிறர்உண்ட கழிவுகளால்
 உயிர்ப்பித்து உறுதி செய்த
 குப்பைத்தொட்டியும்
 கொட்டிய மனிதனுமே
 வாழும்  கடவுளர்கள்
 வாழும் வாய்ப்பினை
 இழந்தவர்க்கு
                            மங்களக்குடி  நா.கலையரசன்.

திசையறியா பயணம்.....

உடலுக்குள் உயிரை
சிறைவைக்கும் அவதியில்
இரைதேடி சிறகடிக்கும்
குருவிகளின் அவசரத்தில்

ஏதோ ஒன்றைத்தேடி-அல்லது
எதைத்தேடுவதெனத்தேடி
முடிவெடுத்தோ எடுக்காமலோ
பயணித்தபடி மனிதர்கள்

சூரியக்கோபத்தை
சூராவளி வேகத்தை
தேவைகளின் துரத்தலினூடே
பாலையில் சுனை தேடும்
பரம்பரைப் பயணம்

வில்-அம்பு பறித்து
குறி பொருள் மறைத்து
வெட்டவெளி நின்று
வில்லாளப் பட்டம் பெற
விரட்டும் சமூகம்

இருந்தும் ....
கடந்து போகிற இரவுகள்
மறுநாள் நம்பிக்கையை
மனம் நிறைத்துவிட்டே
மரணிக்கிறது

தூரத்தின் இலக்கறியா
பயணப்பாதையில்
கண்டடைந்து விட்டதாய்
செவி நுழையும் - சில
அசரீரிக் குரல்கள்
ஆவேசம் விதைக்கிறது.

தாத்தனும் தகப்பனும்
தவறவிட்ட இலக்கில்
தயங்கி தடம் மாறி
தேங்கிடாதிருக்க
ஏதிரெதிர் வந்து
தூரம் குறைவதாய்
நம்பிக்கை உரமிடும்
நெடுஞ்சாலை மைல் கற்கள்.

    மங்களக்குடி-நா.கலையரசன்.

Monday, June 18, 2012

Pudendal-Ramanathapuram

அனுப்புநர்
    ஆ.கருப்புசாமி
    த.பெ. ஆறுமுகம்
    புத்தேந்தல் கிராமம்
    இராமநாதபுரம் தாலுகா
    இராமநாதபுரம் மாவட்டம்
பெறுநர்.
    உயர்திரு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்
    இராமநாதபுரம் மாவட்டம்
    மாவட்ட ஆட்சியர் வளாகம்
    இராமநாதபுரம்

        பொருள்: 01.06.2012-அன்று புத்தேந்தல் கிராமத்தில்
              நடந்த தாக்குதலில்  ஈடுபட்டவர்கள் மீது –
              எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்யக்கோருதல்
                    - - - -
அய்யா,
    நான் மேற்கண்ட முகவரியின் படி புத்தேந்தல் கிராமத்தில் கூலிவேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். கடந்த 31.05.2012 அன்று எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்காக  பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தியாகி இமானுவேல்  சேகரன் படம் பொறிக்கப்பட்ட ப்ளக்ஸ் போர்டு  வைக்கப்பட்டிருந்தது. அந்த போர்டு கிழித்து எரியப்பட்டிருந்ததைப் பார்த்ததும் யாதவ சமூக பெரியவர்களிடம் முறையிட்டோம். கேட்டுத்தருவதாக  சொன்னார்கள்.  ஆனால் கேட்டுத்தரவில்லை . இந்த நிலையில் 01.06.2012 –மதியம்  யாதவர்கள் குடியிருப்புக்குள் உள்ள குருசாமி கோவில் சுவற்றில் இமானுவேல் படத்தை கிழித்து ஒரு நாள் ஆகியும் எதிர்த்து கேட்க முடியாத பள்ளப்பயலுக ஒம்போதுகள் என எங்கள் சாதி குறித்து கேவலமாக எழுதப்பட்டிருந்தது.  இதைப் பார்த்ததும் போடு கிழித்ததை கேட்டுத்தருவதாய் சொன்ன யாதவ கிராமத் தலைவர்களிடம் முறையிட  யாதவர் தெருவுக்குள் சென்றோம் நாங்கள் ஊருக்குள் நுழையத் துவங்கியதும் திட்;டமிட்டு இருந்தது போல கற்களாலும் கம்புகளாலும் கடுமையாகத் தாக்கத்துவங்கினார்கள்.  நாங்கள் சில பேரே சென்றதால் தப்பிச் செல்ல முடியாமல் மறித்து தாக்கினார்கள்.
இதில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த குமார மணிகண்டன் த.பெ. சுப்பிரமணி  பின் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். நாகவள்ளி க.பெ.பாலுச்சாமி , பழனி த.பெ. சேவுகன் , இராமச்சந்திரன் த.பெ. அர்ச்சுணன்  ஆகியோரோடு  என்னையும் கடுமையாக தாக்கி பள்ளத்தாயோலியலுக்கு  பிளக்ஸ் போர்டு  கேட்குதா, ஒழுக்கமா இல்லையினா ஊரோடு கொலுத்திப்புடுவோம்  என கேவலமாய் பேசினார்கள். தாக்கப்பட்டு இராமநாதபுரம் மருத்துவமனையில் நாங்கள்  சிகிச்சை பெற்றபோது இராமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து  விசாரித்தபோது நான் மேற்கண்டவற்றை கூறினேன். ஆனால் அவர்கள் பதிவு செய்துள்ள  முதல் தகவல் அறிக்கையில்  விடுபட்;டுள்ளது.  
எங்கள் சாதிகுறித்து இழிவாகப் பேசியதுடன் கடுமையாகத் தாக்கி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் பாதிக்கப்பட்ட எங்கள் மீதும் ஒரே மாதரியான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதும் மருத்துவமனைக்கு எங்களை பார்க்க வந்திருந்த மாணவன் கவியரசு உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளதும் வேதனையளிக்கிறது. தொடர்ந்து  புத்தேந்தலில் நடைபெறும் இது போன்ற  சாதி துவேச நடவடிக்கைகள்  இழிவுகள் தொடர்கிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 01.06.2012 அன்று எங்கள் மீது தாக்குதல் நடத்தி, இழிவாக பேசிய புத்தேந்தலைச் சேர்ந்த 1. பாலசிங்கம் மகன் பாலமுருகன். ஜி.கார்த்திக் த.பெ. கோவிந்தராஜ், சதீஷ் த.பெ. வீச்சப்புலி , கோபாலகிருஷ்ணன். த.பெ. செல்வராஜ் , சண்முகனம் மகன் ஜெயகாந்த் , தங்கவேல் மகன் பூபதி கருமலையான மகன் மகேஷ், சின்னத்தம்பி மகன் ஜெயக்கண்ணன் , செட்டியப்பன் மகன் முருகேசன் ராமு மகன் தேசிங்குராஜா , hநச்சியப்பன் மகன் சசி , நாகேந்திரன் மனைவி அமுதா, கண்ணன் மனைவி மாசிலாமணி , முருகேசன் மனைவி சரசு , முருகேசன் மகன் மகேந்திரன் , சிங்கமுத்து மகன் சிவக்குமார், ராமசாமி மகன் ஆனந்த் , கருமலையான் மகன் ஜெயபால் , உடையக்காள் மகன் பிரபாகரன் , முருகையா மகன் புல்லாறு , முத்துச்சாமி  மகன் மகேஷ்,  காரான் மகன் பிரபு, உடையக்கா என்ற ஆட்டோராணி , அழகு நாயகம் மகன் உடையக்கா, பெரியகருப்பன் மகன் காளிமுத்தன்    ஆகியோர் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் , பாதிக்கப்பட்ட எங்கள் மீதே போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கியும் எங்களுக்கு நியாயம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்து  நீதி வழங்கிட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். 
நாள்:                                        உண்மையுள்ள
இடம்:
                                       (ஆ.கருப்பசாமி)

Saturday, June 2, 2012


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
 இராமநாதபுரம் மாவட்டக்குழு
குட்செட் தெரு- அண்ணாநகர்-இராமநாதபுரம்.
அனுப்புதல்
   நா.கலையரசன்
   மாவட்டச் செயலாளர்

பெறுநர்
  உயர்திரு. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள்
   இராமநாதபுரம்.

        இராமநாதபுரம் தாலுகா புத்தேந்தல் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகளின் திருமணம் 31.05.2012 அன்று புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்று உள்ளது.  இந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தலித் சமூகத்தை சேர்ந்த  இளைஞர்கள் ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள். திருமணத்தன்று இரவு தியாகி இமானுவேல்  சேகரன்  அவர்களின்  படம் வரையப்பட்டு  இருந்த அந்த ப்ளக்ஸ் போர்டு கிழித்து எடுக்கப்பட்டிருந்தது. 
        யாதவ மக்கள் குடியிருப்பு  பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில்  போர்டு வைக்கப்பட்டிருந்ததால் யாதவ இளைஞர்கள் தான் கிழித்திருக்கிறார்கள்  என தலித் மக்கள்  யாதவ கிராமத் தலைவர்களிடம் முறையிட்டிருக்கிறார்கள். அவர்களும் யார் இதைச் செய்திருந்தாலும் தவறு தவறுதான் நாங்கள் கேட்டுத் தருகிறோம் என கூறியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் தலித் மக்களும்  கலைந்து சென்றிருக்கிறார்கள்.
    01.06.2012 அன்று மதியம்  யாதவ மக்களின் குடியிருப்பிற்கு நடுவே உள்ள குருசாமி கோவில் சுவற்றில் தலித் மக்களை இழிவு செய்யும் வகையில்  இமானுவேல் படம் கிழித்து 24-மணி நேரம் ஆனபிறகும்  கேட்க்க வக்கில்லாத  பள்ளர்கள் 9-க்கள் என இழிவாக எழுதப்பட்டிருந்தது. இது  தலித் மக்களுக்கு  அதிர்ச்சியாக இருந்தது. பிறகு கேட்டுத் தருவதாக சொல்லிருந்த யாதவ கிராம தலைவர்களை  சந்திப்பதற்காக யாதவர் தெருவிற்கு தலித் மக்கள் சென்றிருக்கிறார்கள்.
    இதை எதிர்பார்த்து இருந்தது போல  யாதவ இளைஞர்களும் அந்த பகுதியினரும் வந்த தலித் மக்களை கல்லாலும், கம்பாலும் அடிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குமார மணிகண்டன் (20)த.பெ. சுப்பிரமணி என்பவர்  பின் மண்டையில் கடுமையாக தாக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  நாகவள்ளி(35) க.பெ. பாலுச்சாமி என்பவர் வலது கண்ணிற்கு மேல் நெற்றியில் தாக்கப்பட்டு கொடுங்காயத்தோடு இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்புசாமி (40) த.பெ. ஆறுமுகம் என்பவர் வலது கண்ணில் தாக்கப்பட்டும், வலது கையில் வெட்டப்பட்டும், பழனி (55) த.பெ. சேவுகன் என்பவர் நெஞ்சில் கடுமையாக தாக்கப்பட்டும் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயமடைந்த இராமசந்திரன் த.பெ. அர்ச்சுணன்  சிகிச்சை ஏதும் வழங்கப்படாமல்  கைது செய்யப்பட்டுள்ளார்.
    மேற்கண்ட சம்பவம் சாதிவெறியோடு திட்டமிட்டு நடந்த தாக்குதல்  என்பதாகவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.
பிரச்சனையின் துவக்கத்தையும்  அதன் தன்மையையும் கவனத்தில் கொள்ளாமல் இது ஒரு கோஷ்டி  தகறாறு  என காவல்துறை முடிவு செய்தது  ஆச்சரியமாகவே உள்ளது.
    இமானுவேல் சேகரன் படம் வரைந்ததற்காகவே  போர்டு கிழிக்கபட்டதும் , தலித் மக்களின் கோபத்தை தூண்டும் வகையில் சுவரில் எழுதி வைத்ததும், நியாயம் கேட்டு வந்த தலித் மக்களை,  பள்ள பயலுகளுக்கெல்லாம் ப்ளக்ஸ் போர்டு  கேட்க்குதா? என இழிவாக பேசியதும் , இனிமேல் பஸ் நிறுத்தத்தில் ஒரு பள்ளப் பயலும்  பஸ் ஏறக் கூடாது  என ஒரு கொலை வெறி தாக்குதலை நடத்தி வெறியாட்டம் போட்டதும் ஆதிக்க  சாதி  வெறியாகவே கருதுகிறோம்.
    இந்த பிரச்சனையில் காவல்துறை கோஷ்டி தகராறு என  முடிவு செய்து அந்த பக்கம் 3 பேர் இந்த பக்கம் 3 பேர்  என பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்திருப்பதும் அதிலும் பிரச்சனையில் சம்பந்தப்படாத கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவரான கவியரசுவை கைது செய்ததும் ,  பாதிக்கப்பட்ட  தலித் மக்களையே  மிரட்டுவதுமான நடவடிக்கையில்  காவல்துறை ஈடுபடுவது பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர  உதவி செய்யாது என கருதுகிறோம்.
எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  மாவட்ட குழுவின்  சார்பில்  முன் வைக்கிறோம்.
    திருமணத்திற்கு வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன்படம்  வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை கிழித்த  விசமிகள்  யார் என்றும், தலித் மக்களை ஆத்திரமூட்டும் இழிவான வாசகங்களை  சுவற்றில்  எழுதிய குற்றவாளிகளையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதே பிரச்சனைகள் முடிவுக்கு வர உதவி செய்யும்.
    மேலும் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை  வாபஸ்  பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள தலித் மாணவன்  கவியரசுவையும் மற்றவர்களையும்  உடனடியாக விடுதலை  செய்ய வேண்டும்.
    வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு கொலை முயற்ச்சி மற்றும் எஸ்.சி,எஸ்.டி  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
         மேற்க்கண்ட நியாயமான நடவடிக்கைகளே  பிரச்சனை மீண்டும் வராமல் தடுப்பதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் உதவும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

நாள்:                                    இப்படிக்கு
இடம்:   
                                (நா.கலையரசன்)
                                மாவட்ட செயலாளர்

Friday, March 9, 2012

உயிர் பலி கேட்க்கும் போதை வெறி .


ஒரு சொந்த வேலையாக பைக்கில் முதுகுளத்தூர்  சென்று கொண்டிருந்தபோது எனது வேகத்திற்கு வேகத்தடையாய் அலைபேசி அலறியது. அபதாரம் கட்டிட 500 ரூபாய்  பையில் இல்லாத பயத்தில் சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி அலைபேசியின் அலரலுக்கு  செவி கொடுத்தேன். என் உறவினரின்  நண்பர் மனைவி குடும்பப் பிரச்சனையால் தீக்குளித்த அதிர்ச்சிச் செய்தியை ரகசியமாய் சொன்னது அலைபேசி.
    பதட்டத்துடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு செவிலியர்கள் நீதிமன்ற  டவாலியாய் ' சத்தம் போடாதீங்க' என அடிக்கடி சொன்னாலும்  தீக்குளித்த சகோதரியின் உறவினர்கள் கூடிநின்று  எப்படி நடந்தது என அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். சில நடுத்தர வயதுப் பெண்கள் அடிப்பாவி மகளே இந்த பச்சப் புள்ளையல  அனாதையாக்கப் பாத்தியடி என கதறினார்கள் மனசு கனத்தது.
    கொசுவலை கட்டப்பட்டிருந்த கட்டிலில்  வாழை இலைகளின் மீது கிடத்தி சில வாழை இலைகளால் மூடியிருந்தார்கள். இலைகளின் இடைவெளியில்  நெருப்பில் எரிந்து தோல் உரித்தெறியப்பட்ட உடலாய் ரத்தம் கசிய மரணத்துடன் போராடியபடி கிடந்த அந்த சகோதரியை அருகில் பார்த்த வினாடி  எனக்கு கண் பார்வை இருப்பதை இரண்டாவது முறையாக நினைத்து வருந்தினேன்.
    எனது அமைப்பின் தொடர்பால் எனக்கிருந்த அறிமுகத்தை பயன்படுத்தி மருத்துவர்களிடம் பேசி அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவினேன். எனக்கு உதவிய அறுவை சிகிச்சை மருத்துவர் கருப்புசாமி அவர்கள் 'நெருப்பு வச்சுக்கற கேசு நிறைய வருது ஏதோ ஒரு கோபத்துல வச்சுக்கராங்க. ஆனா பிறகு படர அவதியை நெனைக்க மாட்டேங்கிராங்களே என வேதனையை வெளிப்படுத்தினார் .
    நெருப்பின் அனல் பட்டாலே அலறி ஒதுங்கும் இயல்பு அனைவருக்கும்  பொதுவானது. ஆனால்  தன்னையே நெருப்பிட்டு எரித்துக்கொள்வதென்றால்  நெருப்பைவிட ஏதோ ஒன்று சுட்டுள்ளது என்பதாய்த் தானே அர்த்தம்.    
    இந்த சகோதரி இந்த முடிவினை எடுக்க என்னதான் நடந்திருக்கும் என அறிந்து கொள்வதற்காக உறவினர்கள் கூடியிருந்த இடத்தில் நானும் வந்து அமர்ந்தேன்.
    அவர்களின் அழுகை , ஆத்திரம் துயரங்களிடையே துணுக்குத் துணுக்காய் பேசிய விபரங்களை தொகுத்துப்பார்த்தால் அந்தச் சகோதரியின் கணவன் போதை அடிமை, கஞ்சா பழக்கமும் கூட்டணி சேர்ந்து அவனை 'அகோரி'யாக்கியுள்ளது. தமிழகத்திலும் இராமநாதபுரத்திலும் போதை பொருள்களின் விற்பனை தட்சணை கொடுத்து விடுவதால் தங்குதடையற்று  நடைபெற்று வருகிறது.  இதே போல தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.  சமீபத்திய பத்திரிக்கை சக்திகளை கூர்ந்து கவனித்தால்  குடி வெறியால் கொடுமை செய்ததால் கணவனை கொன்றேன் என வாக்குமூலம் தரும் வீர தமிழச்சிகளை நம்மால் தரிசிக்க முடிகிறது.  பலர் மட்டுமே தன்னையே மாய்த்துக் கொள்ளும் கொடுமையும் நடந்தபடிதான் இருக்கிறது. 
போதை  தனது சக்தியை தின்றுவிட்டதை அறியும் போதை அடிமைகளின் சிந்தனை மனைவியையே சந்தேகத்துடன் மையம் கொள்ளும். தனது இயலாமையினால்  மனைவி அதிர்ப்தியுற்று  யாரோடும் உடன் போக்கிற்கு தயாராகிவிடுவாளோ என பிராந்தி ஓட்டத்தில் இயங்கும் மூலை உள்ளே வந்த கஞ்சா புகையுடன் சந்தேகத்தையும் சேர்த்து  வெளிவிடும் .  இதனால் நிம்மதி  குலைந்து மனைவியின்  ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் தேடி  தேளாய் கொட்டி மனைவியை ரணமாக்கிக் கொண்டே இருப்பார்கள் .
    அதுதான் இந்த தொண்டிப் பகுதியை சேர்ந்த சகோதரிக்கும் நிகழ்ந்துள்ளது. அவளுக்கு  தைரியம் கொடுத்து ஆறுதல் சொல்லும்  விதமாக  அருகில் நின்று கனிவாய் பேசிக்கொண்டே வந்த போதுதான் அந்தப்பெண் வேதனை முனங்கள்களுடன் பேசத் துவங்கினாள்.
        'இது ஏதோ அவசரமா வந்த கோபத்தினால்  செய்துக்கலைண்ணா . உசுரோட பிணமா நடமாடரதை விட ஒரேதா பொணமாயிடனும்முன்னுதான்  இப்படி செஞ்சுகிட்டேன்.  இந்த ஆளோட புத்திய கல்யாணமாகி மறு வீடு போகும் போதே தெரிஞ்சுக்கிட்டேன். எங்க ஊரைச்சேர்ந்த எங்க சித்தப்பா ஒருத்தரக்காட்டி அந்த ஆளு என்ன உங்கிட்ட அடிக்கடி வந்து நெருக்கமாநின்னு பேசுரான். ஆவனை நீ வச்சிருந்தியான்னு கேட்டான். நான் பதறி போய் ஏங்க அது எங்க சித்தப்பாங்கன்னேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அப்ப ரொம்ப வசதி தான் அப்படின்னு என் நெஞ்சுல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டு  அவன் பாட்டுல போய்ட்டான் .
     மனதில் இருந்த ரணமும் உடம்பில் இருந்த ரணமும் கண்ணீராய் பெருகி வழிய  வேதனையை சமாளித்துக்கொண்டு  கொஞ்சம் இடைவெளி விட்டு  பேசத்துவங்கினாள்;. 
    அன்னக்கித் துவங்கினது தினசரி குடி கஞ்சான்னு ஒரு குருப்போட சேர்ந்து குடிச்சிட்டு  வந்து  இன்னக்கி எங்க போனே ....யாரோட பேசினே.... தண்ணி தூக்கிட்டு வரும்போது  பேசினானே அவன் யாருன்னு ஒரே சித்திரவதைதான். அத்தனையையும் இந்த ரெண்டு புள்ளைகளுக்காக தாங்கிக்கிட்டேன்.  ஆனா என்னோட மகனைக்காட்டி  என்னோட சொந்த அண்ணன் பேரைச் சொல்லி அவன் மாதரியே இருக்கானே எப்படி.... அவனுக்குத்தானே பெத்தே...உண்மையைச் சொல்லுன்னு என்னையை உசுரோட எரிச்சுட்டான்னே . நான் எப்படி தாங்குவேன்... நீங்க சொல்லுங்க என்றாள் .
    நான்  கோமா நிலைக்குப் போகாத குறைதான் அத்தனை அதிர்ச்சி. அந்த சகோதரிக்கு கண்ணீரை மட்டுமே பதிலாய்த்தர முடிந்தது எத்தனை கொடுமை. போதை வெறி மனிதனை எந்த அளவுக்கு மனநோயாளியாய் மாற்றி விடுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
        தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களின் தீக்குளிப்புகளுக்கு பின்னால்  எத்தனை மனநோயாளிகள் இருக்கிறார்களோ..... இன்னும் எத்தனை சசோதரிகள் இது போன்ற சைக்கோ பேர்வளிகளிடமிருந்து  விடுதலைபெற அக்கிணியை அரவணைப்பார்களோ என நினைத்தால் மனசு கணக்கிறது .
        இன்று குடிப்பது அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாகிப் போய்விட்டது. பள்ளிச்சீருடையுடனேயே வளர் இளம் பருவத்தினர்  ஒயின் சாப்புக்குள் ஒதுங்குவதாய் ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது.  பிராந்திக்கடையின்  'பார்-ருக்குள் தான் இன்று தமிழ்நாடே இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றாக குடிப்பதையும்  சேர்த்து தங்கள் அடையாளங்களை இழந்து வருகிறார்கள் தமிழர்கள் . சினிமாவிலும்  பாடல்களிலும்  தொலைக்காட்சி தொடர்களிளும்  சந்தோசம் என்றாலும் சங்கடம் என்றாலும் குடித்தே கொண்டாடுவது என்பதை சொல்லித் தருகிறார்கள்.  இது அடிப்படை உரிமை- உழைப்பவன் களைப்புத்தீர உதவும் உற்சாக பாணம்  என நியாயப்படுத்தும்  அறிவாளிகளும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.
        என்ன செய்வது ஊருக்கு 10 கடைகள் தெருவுக்கு 10 கடைகள் என மதுபானக் கடைகளை திறந்து தனது அறக்கடமையை  அரசே செய்கிறதே.  மின்சாரம் , கல்வி , தண்ணீர் என அனைத்தையும்  தனியாரிடம் தந்து விட்டு இந்த உயிர் காக்கும் !! பிராந்தி விற்பனையை மட்டும் அரசே செய்கிறது. இதுவரை 6696 பிராந்திக்கடை உள்ளது.  45 கடைகளை மேலும் திறந்து 16500-கோடியாக போதை விற்பனையை அதிகரிக்க அரசே அற்புதத் திட்டம் தீட்டியுள்ளது எனும்போது  மனது கொதித்து ஆவது என்ன என விட்டுவிட முடியவில்லை.
    இது தமிழர்களின்  கைக்காசை களவாடி , வாழ்க்கையை சீரழித்து  அவர்களை போதை அடிமைகளாக மாற்றி சுயத்தைப் பறித்து எவர் எதைக் கொடுத்தாலும் கையேந்தி வாழப் பழக்கிவிடும் சதி ...இதை முடிவுக்கு கொண்டு வர முயன்றிடவேண்டும்.
    அதுவரை இதுபோல தமிழகத்தில் தீக்குளிப்பில் ஒரு பெண் ஈடுபட்டால் அதற்கு காரணம் என்னவென விசாரித்து கணவன் மது வெறியன்  எனத் தெரிந்தால் அவன்மீது கொலை வழக்கு பதிய வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் முழு கல்வி செலவினை ஏற்பதோடு அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தலா 5 இலட்சம் ரூபாயை அரசே வழங்க வேண்டும். (ஏனெனில்  அவனை மது வெறியனாக்க  உதவியதும்  அவன் வருமானத்தை ஏற்கனவே பிடுங்கி கொண்டதும் அரசுதானே)
    மேலும் போதையில் ஏற்படும் வாகன விபத்து உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தொடரப்படும் வழக்குகளில் நீதி மன்ற தீர்ப்புகளில் சொல்லப்படும் நிவாரணமோ அபதாரமோ  அதை அரசே ஏற்க்க வேண்டும். இவைகளை ஏற்கவி;ல்லையென்றால் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இவைகள்  தமிழ் சமுதாயத்தின் நலன் விரும்பும் அனைவரும் கோரிக்கையாக முன் வைத்து போராடுவது அவசியம் . இல்லையெனில் நமது சகோதரிகளின் அவலக்குரல் ஏதாவது ஒரு பகுதியில் ஒலித்தபடி இருக்கும்.  எது நமக்கு விருப்பம். 
குறிப்பு: தீக்குளித்த அந்த சகோதரி இறந்து விட்டாள் என்ற துயரச் செய்தியோடுதான் இதை எழுதுகிறேன் . அவளின் குழந்தைகளுக்கும் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


Monday, February 27, 2012

தருதலைகளுக்கும் தாலியறுக்க ஒரு மனைவி

  முகநூல் நண்பர்களுடன் எனது துயரத்தையும்  ஒரு ஆலோசனையையும்  பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன். எனது அண்ணன் மகள் வனிதாவுக்கு திருமணம் முடிந்து 7 மாதங்கள் கூட முடியாத நிலையில் அவளின் கணவர் இறந்து விட்டார் எனும் செய்தி இடியாய் இரங்க அனைவரும் ஓடினோம்.
    உடைந்து நொருங்கிப்போன அண்ணன் , ஆத்திர அவதாரத்துடன் தம்பி அவர்களது குடும்பம் அவர்களுடன் என்ன செய்வது என்றே இலக்கறியாமல் நானும் உடன் சென்றேன். எங்கள் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லிடமுடியாது தவித்தோம்.
    காரணம் மருத்துவமனையில் இறந்ததாக தகவல் வந்ததால் அவருக்கு எதற்காக வைத்தியம் பார்த்தார்கள் எனத்தெரியாததால் வந்தது இந்த தவிப்பு.
    எங்கள் அண்ணன் மகளை அழைத்து துயரங்களுக்கிடையே காரணம் அறிய முயன்றோம்.  அவளும் தனக்குத் தெரியாது என கை விரித்ததுடன் 'என்னை அம்மா அப்பாவைப் பார்த்து விட்டு வா' என ஊருக்கு அனுப்பிவிட்டு வைத்தியம் பார்க்கப் போனார்கள் என்றும் ஒரு தகவலைச் சொன்னாள்
    எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவிக்கே தெரியாமல் கணவனுக்குவைத்தியம் நடந்தது என்றால் அவருக்கு என்ன நோய் இருந்தது. குழப்பம் வந்து குவிந்தது. முட்டாளாக்கப்பட்டு விட்டோமோ என்ற அதிர்வில் என்மீது எனக்கே அருவருப்பாய் இருந்தது.
    ஆண்கள் போதை அதிகமானால் உண்மையை உளறிவிடுவார்கள் பெண்கள் சோகத்தை வெளியிட்டு அழும்போது உண்மையை வெளியிட்டு விடுவார்கள் என்பதை என்மனைவி வந்து சொன்ன செய்தி உறுதி செய்தது.
    வுனிதாவின் கணவரின் உறவுப் பெண்கள் வைத்த ஒப்பாரி அழுகைக்கிடையில் அவருக்கு மது-கஞ்சா அடிமை என்பதும் அவனுக்கு டி.பி இருந்ததும் வெளிப்பட்டதுடன் அவனுக்கு பேரு சொல்லா நோய் இருந்ததாகவும்  சந்தேகம் இருந்ததாக அண்டை வீட்டாரும் ஆறுதல் சொன்னார்கள்.
    ஊரும் , உறவும் உதிரியாய் சொன்ன தகவல்களில் உண்மையை உரித்தெடுப்பதற்காக தோழர்கள் உதவியுடன் அவனுக்கான மருத்துவ விபரங்களை சேகரித்தேன்.
    உண்மை என் முகத்தில் காரித்துப்பியது. நீண்டகால நோயாளியான தன் மகனை காப்பாற்றிட முடியாது எனத் தெரிந்தும் கள்ளியும் கற்றாளையும் போட்டு என் மகைனை புதைக்கக் கூடாது என (திருமணமாகாமல் இறந்தால்  சடங்கு ஏதுமின்றி கள்ளி கத்தாளை போட்டுத்தான் புதைப்பார்களாம் ) நோயை மறைத்து  அவசரமாய் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
        எனது அண்ணனும் மகளுக்கு 22 வயதாகி விட்டது எப்பத்தான் கல்யாணம் பன்றது  வர்ர மாப்பிள்ளைளை எல்லாம் நொட்டை சொல்லாதீங்க-டான்னு என்னையும் , தம்பியையும் அடக்கிவிட்டு  அவர்களின் அவசரத்திற்கு  இவரும் உதவி செய்தார்.
        மணப்பந்தலிலேயே பைக் வைக்கவில்லை என்றும் மகளுக்கான நகையில் 2 பவுன் நகை குறைந்ததற்கும் எனது அண்ணன் பட்ட அவமானம்  இதுவரை நாங்கள் சந்திக்காதது.
    மகளின் வாழ்க்கையாயிற்றே  என்று எங்கள் வீட்டு மனையிடத்தில் ஒரு பகுதியை விற்று சமீபத்தில்தான் பைக் வாங்கிக்கொடுத்த கடனையும் நகையையும் சமாளித்தோம்.
    அவமான  நெருப்புகளை அள்ளிக் கொட்டியபோதும் மகளின் வாழ்க்கை என வலி சகித்து புன்னகைத்தோம்.
    ஆனால் 7மாதம் முடியவில்லை அவளின் மண வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.
    என் மனைவி தொடர்ந்து வற்புறுத்தியும் எங்கள் மகளை நான் இப்போதுவரை நேரில் சந்திக்கவில்லை. அந்த தைரியம் எனக்கு வரவில்லை.
    வீடே துயர அமைதியில் ஒவ்வொருவர் மனதிலும் எங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளோம்.
    இNது போல ஏராளமான துயரங்கள் நடந்துள்ளது. ஆனால் யாரும் திருந்தவில்லை. ஒரு பெண்ணெனில் அவளுக்கு வாழ்க்கையில் இறுதி இலக்கே திருமணம் தான் எனும் கருத்தை  சமூகம் பெற்றவர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைத்துள்ளது.
    எனவே தான் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து வைத்து தங்கள் கடமையை முடித்து விடவேண்டும்  என துடிக்கிறார்கள். அந்த அவசரம் அவர்களின் அறிவைத் தின்று விடுகிறது.
       திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது , ஆயிரங்காலத்துப் பயிர் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட திருமணம்  இன்று பகிரங்கமாய் கொள்ளையடிக்கும் திருட்டுத்தனத்தை அங்கீகரிக்கும் அனுமதிச் சீட்டாய் மாறிவிட்டது.
    நமது முன்னோர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் சில நடைமுறைகளை சம்பிரதாயமாய் சடங்காய் உருவாக்கியிருந்தனர்.
    திருவிழாக்களில், விசேச வீடுகளில் ஒரு பெண்ணைப் பார்த்து அந்தப் பெண் பிடித்துவிட்டால் , அந்த பெண் குறித்து விசாரித்து , அந்த ஊருக்கு அருகிலுள்ள தங்கள் உறவுகள் நண்பர்கள்மூலம்  விசாரித்து,  பெண்ணுக்கு திருமணம்  செய்யும்  முடிவில் இருக்கிறார்களா? என அறிந்து கொண்டு பிறகு மாப்பிள்ளையின் நெருங்கிய  உறவினர்கள் நேரில் சென்று கலந்து பேசி பிறகு முறைப்படி பெண்பார்க்கும் சம்பிரதாயம் அரங்கேறும்.
    பெண் வீட்டார்களும் தங்கள் பங்கிற்க்கு மாப்பிள்ளை  விபரங்களை விசாரிப்பார்கள். வீடுபார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, தேதி குறிப்பது எனும் தனிச்சம்பிரதாயங்களே.  மாப்பி;ள்ளை  அவரது பெற்றோர் குறித்து  விபரம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் தான். ஆனால் இந்த நிகழ்வுகள் குறித்த புரிதல்களற்று போனதால் இது விருந்து வைபவங்களாய் மாறிவிட்டது.
    மாப்பிள்ளையின் வீடு பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்களிடம்  மாப்பிள்ளை அவர்கள் பெற்றோர் குறித்து விசாரித்தால்  நல்ல கவனிப்பு, நல்ல விருந்து, வசதியான வீடு எனவே சிலாகிக்கிறார்கள்.
    இதனிடையே திருமண ஏற்பாடுகளும் இன்று தனியார்மயமாகிவிட்டது. கொடுக்கும் கமிசனுக்கு ஏற்ப மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் பெருமைகள் போலியாக கட்டமைக்கப்படுகிறது. நுகர்வு தாக்கங்கள் நிறைந்து போட்டி உலகமாக மாறிப்போன நிலையில் பொருள் சேர்ப்பதிலேயே நேரம் கடந்து விடுவதால்  திருமண தகவல் மையங்கள் , கமிசன் தரகர்களையே  பிள்ளைகளை பெற்றவர்கள் சார்ந்து நிற்க்க துவங்கினார்கதள். இதற்கு பிறகு தான் ஏமாற்று திருமணங்கள் , போலி திருமணங்கள் , நோய் மறைத்து நடக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளது.; இதனால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இது மாற வேண்டும்.

பெண்களும் தங்கள் புகுந்த வீட்டில் நடப்பதை மறைந்து விடுகிறார்கள். குhரணம் கடன்வாங்கி  கஷ்டப்பட்டு பெற்றோர் செய்து வைத்த திருமணம் மகள் நல்லமுறையில் வாழ்கிறாள் என சந்தோசப்படட்டும் அதை கெடுக்கக் கூடாது என நினைத்து மறைத்து விடுகிறார்கள்.
    அதன் விளைவாய் நிகழும் துயரங்களில் ஒன்றுதான் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததும்  இது தொடரக்கூடாது.
    குடிப்பதையே அடிப்படை உரிமையாய் புரிந்து கொண்டுள்ளவர்க்ள அதிகரித்து போதைச் சமூகமாய் மாறிவரும் சூழலில் தனது பெண்ணை கொடுப்பது என முடிவெடுக்குமுன் தீர்க்கமாக விசாரியுங்கள்.
மருத்துவச் சான்றிதழ் திருமண உறுதிக்கு முன் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.
      இடைத்தரகர்கள் கட்டமைக்கும் பெருமை புதைகுழியில் சிக்காமல் நண்பர்கள் உறவுகள் மூலம் விசாரித்து உறுதி செய்திடல் வேண்டும்.
பெண்களும் சமூகமும் வரதட்சனை கேட்க்கும் மாப்பிள்ளையை போதை அடிமைகளை இழிவு செய்து புறக்கணிப்பதுடன் தங்களை வரதட்சணை மூலம் மதிப்பிள்ளா பண்டமாய் மாற்றுவோரை ஒதுக்கித் தள்ள  வேண்டும் .
     புகுந்த வீட்டில் உறவுகள் பிரச்சனைகள் குறித்து பெற்றோரிடம்  பெண்கள் பேசவேண்டும்.  தனக்கு எதிரான தவறான எதையும் பொருத்துக் கொள்ளும் பேதமை ஒழிய வேண்டும்.
    அப்போதுதான் தறுதலையை பெற்றிருந்தாலும் தாலியறுக்க பெண் தேடும் இரக்கமற்ற நாய்களை அழிக்க முடியும்.