Thursday, June 27, 2013

சிறப்புச் சிரிப்பு....

காசு பணம் தேவையில்லை
கரைந்துவிடும் கவலையில்லை
காத்திருந்து கைக்கொள்ளும்
கடல் கடந்த பொருளுமில்லை
தள்ளுபடி தவணைமுறை
தந்து வாங்க தேவையில்லை
நமக்குள்ளே நிறைந்திருக்கும்
அன்பின் சிலிர்ப்பு -இது
நமக்கு மட்டும் இயற்கை தந்த
அற்புதம் சிரிப்பு

நீண்ட காலமாச்சுங்க –நாம
நிம்மதியா சிரிச்சு
தினம் எந்திரமா உழைச்சு-அந்த
நினைப்பே மறந்து போச்சு
படிப்பறிவும் உடல் பலமும்
சந்தைச்சரக்காய் போச்சு –நம்ம
சந்ததிக்காய் சக்கையாகும்
வாழ்க்கை நமக்காச்சு
கூடிச்சிரிப்போம் வாங்க –சிரிச்சா
கூடும் ஆயுள் தாங்க

இயற்கை படைச்சு வச்சதிலே
மனுசந்தாங்க அழகு –அந்த
மனுசனுக்கே களங்கமில்லா
சிரிப்புதாங்க அழகு
மனசுவிட்டு சிரிச்சுப்புட்டா
மரணம் தள்ளிப்போகும் - அந்த
மனிதர்கூடி சிரித்து வாழ்ந்தா
மரணம் மரித்துப் போகும்
வறுமைக்குள்ளும் வாழ்க்கைக்கான உயிர்ப்பு
வாரித்தந்திடுமே இதயம்  வருடும் சிரிப்பு

இறுக்கம் விட்டு குலுங்கி சிரிச்சா
இதயம் துள்ளிக் குதிக்கும் -அது
ரெக்கை கட்டிப் பறக்கும்
அதன் சுற்றுவட்டப் பாதை தடுக்கும்
பொல்லாததை தள்ளும் -உடல்
புதுப்பொலிவைக் கொள்ளும்
ஆரோக்கியம் அள்ளித்தருமே சிரிப்பு-இதை
அடைகாத்து வளப்பது உன் பொருப்பு

குழந்தைகளின் சிரிப்பு –நம்மை
மயிலிறகாய் வருடும் -இளம்
கன்னியரின் சிரிப்பு –நம்
இளவை வாசல் திறக்கும்
மணந்தவளின் சிரிப்பு –நாம்
உயிர்த்தெழுந்திட உதவும்
உடன் பிறந்தோர் சிரிப்பு –நம்
மன பலத்தைக் கூட்டும்
பெற்றவரின் சிரிப்பு –நாம்
பிறந்த சிறப்பைப் பேசும்
நண்பர்களின் சிரிப்பு –நாளைய
நம்பிக்கையை வளர்க்கும்
உறவுகளின் சிரிப்பு –அன்பு
உலகத்தை விரிவாக்கும்

சிரிப்பு நிறைந்து வழியும் வீட்டை
துயரம் நெருங்கிடாது – அந்த
துயர் துறந்த வீட்டைவிட
சொர்க்கம் வேறு ஏது.....

    -மங்களக்குடி நா.கலையரசன் -

ரத்த ருசி.....

அடைமழை நீர்கூட
அரவணைக்க அணையின்றி
சமுத்திரம் தேடி
சங்கமிக்கிறது.

மணலாடை களவாடும்
மாபியாக்களால்
மானம் துறக்க மனமின்றி
வரமறுக்கிறது வைகை

நீர்வழிப் பாதைகள்
கான்கிரீட் சுமப்பதால்
கருவை பயிராகும்
விலை நிலங்கள்

மானாவாரி மனிதர்களின்
மரணம் தடுக்கும்
கனரகத் தொழிலாய்
கரிமூட்டங்கள்

உணவளிப்போர் எனும்
பெருமை சுமந்தபடி
ஊர்ஊராய் அலைகிறோம்
உயிர் பிழைக்க

நாடோடி வாழ்க்கை
வேரோடியதறியாமல்
நாங்கலென்னவோ
நாடாண்டோர் எனும் கனவில்
நரபலி கேட்கும்
நினைவு தினங்களில்
ரத்தம் ருசித்தபடி

        மங்களக்குடி நா.கலையரசன்

வினைப்பயன்

9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சென்னையில் வகுப்பறையிலேயே தனது ஆசிரியரை கத்தியால் குத்தி படுகொலை செய்தான்
தமிழகம் இதுவரை சந்திக்காத பிரச்சனை என்பதால் அனைத்துப் பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்தனர்
ஒரு சின்னஞ்சிறிய பாலகனிடம் இப்படி ஒரு வன்மம் எப்படி கிளைவிட்டது என பலர் ஆச்சரியம் அணிந்தனர்
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பள்ளிகளில் தனது ஆசிரியர்களை 'சென்னை சம்பவம் இங்கும் நடக்க வேண்டுமா?' என சில மாணவர்கள் மிரட்டியதாக வந்த செய்திகள் படர்ந்திருந்த பதட்டத் தீயில் பெட்ரோல் ஊற்றியது.
பெற்றோர்கள் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என பரபரப்புச் செய்தி வெளியிட்டு ஆலோசனைகளை அள்ளி இறைத்து விட்டு அடுத்த பரபரப்புச் செய்தி வேட்டைக்கு வலையுடன் புறப்பட்டு போய்விட்டன ஊடகங்கள்.
இந்த பிரச்சனையை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் சார்ந்ததாகவோ பெற்றோர் ஆசிரியர்  மாணவர்களின் உறவு சார்ந்ததாகவோ சுறுக்கிப்பார்ப்பதான விவாதம் பிரச்சனையின் வேரை நெருங்குவதை தடை செய்து விடும்
நடந்த சம்பவம் அல்லது நடைபெற்று வரும் சம்பவங்கள் இன்றைய சமூகச் செயல்பாட்டின் செயல்படுத்துதலின் வெளிப்பாடுகள் என புரிந்துணர வேண்டியுள்ளது.
ஒரு சமூகத்தின் செயல்பாடுக்ள பொருளாதார தளத்தின் மீதே கட்டமைக்கப்படுகிறது ஒரு நாட்டில் கடைபிடிக்கப்படும் பொருளாதாதாரக் கொள்கைதான் இந்த செயல்பாட்டில் மிகையான பங்கை செலுத்துகிறது.
ஒரு அரசாங்க தேசத்தின் வருமானத்தை தனது குடிமக்களுக்கு பங்கிட்டுத்தரும் முறையிலேயே  எந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக  அது செயல்படுகிறது என புரிந்து கொள்ள முடியும்.
தான் சார்ந்து நிற்க்கும் வர்க்க நிலைக்கு ஆதரவாகவே அதன் கொள்கைகள் திட்டங்கள் நிறைவேற்றும்  இந்த நிலைபாட்டில் நின்று அந்த திட்டங்களை நிறைவேற்றவே அரசின் கிளை அமைப்புகள் செயல்படும்
இந்த செயல்பாட்டின் விளைவாய் ஆட்சிக்கு ஆதரவான இயல்புகளை கொண்டதாய் சமூகத்தின் அனைத்து கூறுகளையும் வடிவமைக்கும் . பெருமுதலாளிகளின் பிரதிநிதியான அரசு அவர்களின் நலனுக்காக பன்னாட்டு நிறுவனங்களை பங்காளிகளாய் இணைத்துக்கொண்டுள்ளது. இந்த புரிதல் வழி நின்று இந்த பிரச்சனையை அணுகுவதே சரியான தெளிவைத்தரும்
    இன்றைய இந்தியா உலகமயமாகிவிட்டது. 90கள்; துவங்கி இக்கொள்கை அமுலாக்கப்பட்டு வருகிறது. அனைத்தையும் விற்பனை சரக்காக்குவது உலகு தழுவிய வணிகம் இரக்கமற்ற லாபவெறி இதுவே அந்த கொள்கையின் குணம் கடந்த  20 ஆண்டுகளாக அமுலாகி வரும் கொள்கையால் இந்தியாவில் மருத்துவம் கல்வி ஒரு குடிமகனின் அடிப்படை தேவைகள் என அனைத்தும் வணிகமயமாகிவிட்டது. புணம் உள்ளோர் வாங்கிக் கொள்ளலாம் . அரசே இன்று ஒரு வணிக நிறுவனம் போல செயல்படத்துவங்கியுள்ளது. வெளிப்படையானது. பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்க துவங்கி இன்று தண்ணீரைக் கூட தனியார் மூலம் விற்பனை செய்ய திட்டமிடுகிறது.

இந்திய பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மனிதர்களுக்கு தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி தங்கள் பொருட்களுக்கு ஏற்ப மனிதர்களை புணரமைக்கிறார்கள். பணம் உள்ளவருக்கே இவ்வுலகு என்றானதே சமூகம் அநீதிகளை அருவடை செய்துகொள்கிறது.

இரக்கமற்ற இந்த சமூகத்தில் பணமே பாதுகாப்பு எனும் வெறி மனிர்கள் மனதில் கட்டமைக்கப்படுவதால் வணம் தேடும் போராட்டத்தில் சுமைகள் வேண்டாமென குடும்ப உறவுகளைக் கூட உடைத்தெறிகிறார்கள். சமூக வளர்ச்சி தேவைகளை ஒட்டி குடும்ப வடிவங்கள் உடைவது தவிர்க்க முடியாதது என பேசும் முற்போக்காளர்கள் கூட முதியோர் இல்லங்கள் அதிகரிப்பது குறித்து கவலை கொள்கிறார்கள் இவை முரணானதில்லையா...?
தனிக்குடித்தனம் தரும் பாதுகாப்பற்ற உணர்வால் பணமே பாதுகாப்பு எனும் தவறான புரிதலில் பணத்தேடலில் அலைகிறார்கள் இவர்களின் குழந்தைகள்  உறவுகள் அறியாத அடையாளம் இல்லா ஆயாக்கள் விடுதிகள் என வளர்வதால் பண்முக உணர்விழந்து இறுக்கத்துடனேயே வளர்கிறார்கள்.
சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குமிடம் கல்வி நிலையங்கள் எனும் அக்கரையை அகற்றிக் கொண்ட அரசுகள் எவர் வேண்டுமானாலும் நடத்தலாம் என முடிவெடுத்து அறிவித்ததும் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அவர்களுக்கு படியளக்கும் வியாபாரிகள் என கல்வித்தளத்தில் நுழைந்து கல்வி நிலையங்களை வணிக நிலையங்களாக மாற்றிவிட்டார்கள். மாட்டுக் கொட்டகை மரத்தடியெல்லாம் வகுப்பறைகள் 'பிச்சைப் புகினும் கற்க்கை நன்றே 'எனும் ஒளவையின் வாக்கை நம்பி கற்க,  தனியார் கல்வி நிலையத்தில் பிள்ளைகளை சேர்த்தவர்களை தபிச்சை எடுக்க வைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு நிற சீறுடை ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு நிற சீருடை பள்ளி வாகனம் , விடுதி உணவு சைக்கிள் பைக் நிறுத்த கட்டணம் நோட்டு பேப்பர் சூ டியூசன் என எத்தனை  கட்டண வசூல்கள் கல்வி வளாகங்கள் சூப்பர் மார்க்கெட்போல ஆகிவிட்டது.

மறுபுறம் ஆய்வுக் கூடமில்லை, நூலகமில்லை விளையாட்டுத்திடல் இல்லை பல்திறன் வளர்க்க எந்த வசதியும் இல்லை தரமான பயிற்ச்சியுள்ள ஆசிரியராவது உள்ளார்களா? இல்லை 3000 4000 ஊதியத்திற்கு நியமிப்பது, வேறு வேலை கிடைத்ததும் அவர் விலகிவிட அடுத்தவர் நியமனம் 3 மாதத்திற்கு ஒரு ஆசிரியர் என நியமிப்பது ஒருவர் பாடம் எடுத்த முறை இன்னொருவர் வந்ததும் மாறுகிறது. ஒரு மாணவன் எப்படி புரிந்து படிப்பது ஆனால் தங்கள் கொள்கையை தொடர தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்டிட சிறப்பு வகுப்புகள் சிறப்பு கட்டணம் என மாணவர்களை மேலும் மேலும் சக்கையாக புளிகிறார்கள் இந்த அராஜகம் குறித்து அரசம் எந்த கல்வி அதிகாரியும் கண்டு கொள்வதே இல்லை அந்த தைரியத்தில்தான் போதிதர்மர்களாக மாற்றித் தருகிறோம் என புருடா விட்டு பணம் பறித்து சேதுகளை உருவாக்கிக் ;கொண்டிருக்கின்றன தனியார் கல்வி நிறுவனங்கள். சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கும் ஒரு மாணவனுக்கு கல்வி நிலையங்கள் ஆசிரியர்கள் மீது எப்படி மறியாதை வரும் தனது பணத்தில் இயங்கும் நிறுவனம் என நினைக்கும் அவனிடம் மதிப்பை எப்படிப்பெரும் . இதனால் கல்வியும் மதிப்பிழந்து போகும் அபாயம் உள்ளது.
    கல்வி ஒரு சமூகத்திற்கு கண்போன்றது எனும் புறிதலும் கடமையுணர்வும் ஆசிரியர்களிடம் உள்ளதா? சுpல ஆசிரியர்களிடம் சிறுது நேரம் தனியே பேசினாலே பாவம் மாணவர்கள் என்ற எண்ணமே ஏற்படுகிறது. தற்போதைய கல்விதரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த கல்வி முறை குறித்தோ நாம் வாழும் சமூகம் குறித்தோ மாணவர்களுக்கு புரிதலை உருவாக்காது என விளக்கி சமச்சீர் கல்வி குறித்த விதையை தூவி விருட்சமாக்கிய ஆசிரியர்கள் சிலர் உள்ளனர் என்பது உண்மை என்றாலும் பலர் பாட புத்தகத்திற்கு வெளியே என்ன நடைபெறுகிறது என்ற ஞானமற்றவர்களாகவே உள்ளனர் என்பது வருந்துதற்குறிய உண்மை. புத்தகத்தில் உள்ள பாடத்தை விளக்கிச் ;சொல்வதற்காக மட்டுமே ஆசிரியர் என்றால் பக்கத்து வீட்டு பாட்டியே போதுமே ... தற்போது ஆசிரியர்கள் அந்த வேலையைத்தான் செய்கிறார்கள்.
    நாளைக்கு விளக்கப் போகும் பாடத்திற்காக மாணவர்கள் புரிந்து கொள்ள உதவியாக குறிப்புகள் விளக்கங்கள் உதாரணங்கள் கதைகள் என முன் தயாரிப்பு செய்து வகுப்பரைக்குச் செல்லும் ஆசிரியர்  எத்தனை பேர் நமது சமூகத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் புரிந்துகொள்ள பயன்படும் காலக் கண்ணாடியான இலக்கியங்களின் தொடர்பு எத்தனை பேருக்கு உள்ளது. எத்தனைபேர் நூலக உறுப்பினர்கள் 25ஆயிரம் துவங்கி 1லட்சம் வரை ஊதியம் பெரும் ஆசிரியப் பெருமக்கள் நமது சமூகம் சார்ந்த அறிவைப் பெற உதவும் நூல்கள் வாங்கிட எத்தனை ரூபாய் செலவு செய்கிறார்கள்? இப்படி தொடராய் புறப்படும் கேள்விகளுக்கு எத்தனை பேர் பதில் சொல்வார்கள்.
    ஒரு குழந்தையாக பள்ளிக்குள் நுழையும் ஒருவர் வளர் இளம் பருவம் வரை ஆசிரியர்களுடன் தான் அதிக வருடங்களை கழிக்கிரான், அவனுக்கு ரோல்மாடல் ஆசிரியர் தான் வயது முதிர்ந்த பலர் தனது ஆசிரியர் குறித்து இன்னும் பெருமையாய் பேசுகிறார்கள் இன்றைய ஆசிரியர்கள் குறித்து இன்றைய மாணவர் நாளை பேசுவதற்கு ஏதாவது உள்ளதா? தனது மாணவரின் இயல்புகள் தனித்திறன் குறித்து அறிந்து கொள்ள முயல்வதே இல்லை. குழந்தைகளின் இயல்பு அவர்களை அணுகும் விதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் போதிக்கபடுவதில்லை. பி.எட் முடித்ததும்  ஏதாவது தனியார் பள்ளி குறைந்த ஊதியம்  பெரும் ஊழியர் என சேர்த்துக் கொள்கிறது.படிக்கும் மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் வயதில் பெரிய இடைவெளி இல்லாததால் மாணவர்களிடம் உள்ள அத்தனை குணங்களும் ஆசிரியர்களிடமும் உள்ளது. இதனால்தான் பாலியல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆசிரியர்களே ஆளாகும் கொடுமை அரங்கேறுகிறது. இவை உலகு சார்ந்த கொள்கை தந்த பரிசுகள்  உலகத்துடன் தொடர்பு வேண்டும் எனும் போது அவற்றின் கலாச்சாரங்களோடும் கலப்பு மணம் செய்தே தீர வேண்டும். எனவே பணவெறி கொண்டலையும் குடும்பங்கள் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் நடவடிக்கைகள்; இந்த சமூகத்தின் இன்றைய  செயல்பாட்டின் விளைவுகள் அனைத்தும் வணிகமாய் வரிந்துகொண்ட ஆட்சியாளர்கள் நிர்வகிக்கும் லாபத்தையே இலக்காய் கொண்ட சமூகத்தில் நேர்மை ஒழுக்கம் பண்புசார் வாழ்க்கை  உயர்ந்த உறவு நெறியை  இவற்றுக்குள் மட்டும் தேடுவதும் கிடைக்கும் என நம்புவதும் மூட நம்பிக்கை .

Wednesday, June 26, 2013

உத்திர(வாதமற்ற)காண்ட'

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நிகழ்ந்த வெள்ள சேதங்கள் மலை சரிவுகளால் ஏற்பட்ட உயிர் பழிகள் வெள்ளம் சூழ்ந்ததால் உணவின்றி இறந்த நூற்றுக்கணக்கான மக்கள் என அந்த சின்ன சிறிய மாநிலமே நிலை குழைந்து போயுள்ளது. உயிரழந்தோருக்கு அஞ்சலியையும் பாதிக்கபட்டிருப்பவர்களுக்கு ஆதரவையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.   பிரசித்திப் பெற்ற கோயில்கள் உள்ள மாநிலம் என்பதால் பல மாநிலங்களை சேர்ந்த அப்பாவி பக்தர்கள் பல நூறு பேர் பலியானது சோகமாகும். தமிழ்நாட்டிலிருந்து சென்ற அப்பாவி பக்தர்களை உடனடியா தலையிட்டு காப்பாற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு. இ;த்தனைக்கு நடுவில் எனக்கு புரியாதது இரண்டு விசயம். பழனிஇசபரிமலை  தொடங்கி பல புன்னிய ஸ்தலங்கள் என்ற நம்பிக்கையில் பக்தி பயணம் தொடரும் பலர் விபத்துகளில் இறந்து போவது தொடர்ந்து நடந்து வந்தாலும் சுனாமியால் தெய்வங்கள் வாழும் ஆலயங்கள் சிதைந்து போனாலும் எத்தனை முறை இந்த திருப்பயணங்கள் தொடர்ந்தும் எந்த பிரச்சனையும் தீராத நிலையிலும் மீண்டும் மீண்டும் படையெடுத்து பயணித்து மாண்டு போகும் மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. உத்தரகாண்ட சென்ற பக்தர்கள் திரும்பி விட்டார்கள். ஆனால் சிவன் சிலை மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூச்சு திணறுவதை கண்டபிறகாவது  எவராவது இருவர் இந்த பயணங்களை தவிர்த்து விட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் இந்தியாவை எவர் ஆட்சி செய்தாலும் இவர்கள் வாழ்க்கை அவதிக்குள்ளாவத தொடர்வதால் கவர்மெண்டை விட்டுவிட்டு கடவுள்களை தேடிச் செல்வது தொடரத்தான் செய்யும். இன்னொன்று அண்டை மாநிலங்களை பிய்த்து எடுத்து ஒட்டுப் போட்ட உத்தரகாண்ட மாநிலம் ஒன்றரை கோடிதானாம் மக்கள் தொகை. இந்த வெள்ளத்தல் இறந்தவர்கள்  ஆயிரத்திற்கு மேலாம் . வெள்ளம் சூழ ஆங்காங்கே உணவு கிடைக்காமல் உலக தொடர்பில்லாமல்  சுருண்டு கிடப்பவர்கள் பலாயிரம் பேராம். மீண்டும் மழை தொடருமாம் . நிவாரண பணிகளை துவங்கவே முடியவில்லையாம். மாநில  அரசு கை பிசைந்து நிற்கிறது. சகஜ வாழ்க்கை துவங்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகுமாம். அரசியல்வாதிகளில் பதவி ஆசைகளால் புது புது மாநிலங்களை உருவாக்குவது என்கிற பெயரில் ஊராய் இருந்ததை தெருவாய் சுருக்கி தெருவில் விட்டு விட்டார்கள். மொழிவழி மாநிலமே சரியானது என்றார்கள் இடதுசாரிகள் . இவர்கள் சொல்வது சரியல்ல என கேலி பேசி சாம்ராஜ்யங்களை உடைத்து பாளையங்களாக்கியதால் பலியானவர்கள் உத்தரகாண்ட் மக்கள்தான். இதை நினைக்கும்போதே மனதுக்குள் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்னரைகோடி மக்களை சேர்த்து உத்தரகாண் என்றார்கள். ஒரு அடைமழைக்கே உயிர் ஒடுங்கி உதவியை எதிர்பார்த்து கிடக்கிறது.  இலங்கைக்குள்ளே ஒரு தனி நாடாம். நினைக்கும்போதே மனசு அதிர்ச்சியில் வேர்த்து போகிறது . என்ன  செய்ய மாகாண சுயாட்சி என்றால் நம்மை இனவிரோதி என்பார்கள்.  அதற்காக கழுத்தை தடவினால் முகத்தை முகர்ந்து பார்க்கும் மாடாய் இருக்க மனம் வரவில்லையே.......