Saturday, December 10, 2011

மீண்டும் ஆக்கிரமிப்புப் போர் அதே வணிக வடிவில்


           தற்போது அச்சு ஒளி ஊடகங்களின் பேசுபொருளாக்கப்பட்டுள்ள விசயம் சிறுவணிகத்தில் அன்னிய மூலதனத்தை மத்திய அரசுஅனுமதித்தது குறித்துதான் . இதனையொட்டி இந்திய பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளால் அணல் தகிக்கும் நிலையேற்பட்டது. 2011 நவம்பர் 22 துவங்கி டிசம்பர் 7வரை பாராளுமன்றம் முடக்கப்ட்டது. ஒருசில கட்சிகளைத்தவிர ஏனையஎதிர்கட்சிகள் எதிர்த்து போராடி வருகிறார்கள். சிறு வணிக நிறுவனங்கள் ஒரு நாள் கடை அடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை அரசுக்கு சொன்னார்கள்.   இந்த அதிரடிகளால் அசந்துபோன  எது நடந்தாலும் கவலைப்படாமல் கைபேசியும் கையுமாய்த் திரியும் இந்திய குடிமகன்களுக்குக் கூட இது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
          அப்படி என்ன சட்டத்தை;தான் கொண்டுவருகிறது மத்திய அரசு..?  பெரும் தொழில்களையெல்லாம் கூட முழுவதுமாய் விழுங்கி சுக்குக் கசாயம் இல்லாமலேயே செரிமானம் செய்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களை நமது நாட்டில் சிறுவணிகத்திலும் அனுமதிக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அதனை செயல்படுத்தவும்  முனைகிறது. அதாவது காய்கறிக்கடை மளிகடைக்கடைகள் வைக்க அவர்களுக்கும் அனுமதி தருகிறது . எப்படியெனில்  ஒரே பொருளாக விற்றால் 100 சதவீதம்  மூலதனம்  போட்டு அவர்களே செய்யலாம் பல்பொருள விற்பனை என்றால் 51சதவீதம் மூலதனம் போட்டு வணிகம் செய்யலாம் என்பது தான் அந்த சட்டத்தின் சாரம்.
    ஒருமுறை இந்தியாவுக்கு வருகை தந்த 'மைக்ரோ சாப்ட்வோ'; அதிபர் 'பில்க்கேட்ஸ'; சொன்னார். ஏந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தான்  எந்த நேரத்திலும்  தேனீர் குடிக்கும்  மனிதர்களும் கடைகளையும் நான் பார்த்தேன்.  இந்தியாவில் என்னை கவர்ந்தது இதுதான். இதுகுறித்து ஆய்வு செய்வேன்  என்றார். காரணம் பிற நாடுகளில் பருவகால நிலைகளுக்கேற்பவே வௌ;வேறு வகையான பானங்களை பயன்படுத்துவார்கள். இந்தியாவில்தான் காலை, மாலை, இரவு, கோடைவெயில்,அடைமழை என காலமுறையின்றி எப்போதும் தேனீர் கடைகளிலும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதும். போதை அடிமைகளைப் போல டீ அடிமைகள் இந்தியாவில் அதிகம். இதைக்கண்டுதான் இந்த உலகப்பெருமுதலாளி  தேனீர்கடை நடத்திட யோசிப்பதாய் சொன்னார்.
    இப்படி இந்தியாவின் சிறுதொழில்களின் மீது ஓநாயாய் கண் வைத்திருந்த வெளிநாட்டு பெருமுதலாளிகள் அமெரிக்காவின் உதவியுடன் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்து இந்த அனுமதியை பெற்றுள்ளனர். முதல் கட்டமாய் அமெரிக்காவைச் சேர்ந்த 'வால்மார்ட்' பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'கேரிபோர்' இங்கிலாந்தைச் சேர்ந்த 'டெஸ்கோ எனமூன்று ராட்சத நிறுவனங்கள் 53 நகரங்களில் கடைகளை துவங்கிடப் போகிறதாம். 
    வால்மார்ட்டைப் பொருத்தவரை தனது கடையை 20 லட்சம் சதுர அடிப்பரப்பில் 650-லிருந்து 1000 கோடிவரை மூலதனம் போட்டு பல்பொருள் அங்காடிகளை திறக்கப்போகிறதாம்(என்ன சொல்லும் போதே சும்மா அதிருதுல்ல). நீங்கள் ஒரே கடைக்குள் நுழைந்தால் போதும் வேண்டிய எந்தப் பொருளையும் வாங்கிக்கொண்டு அலைந்து திரியாமல் வீட்டுக்கு வந்து விடலாம்.  பொருள்களோடு உங்களுக்கான பொழுதுபோக்கு  அம்சங்களும் இருக்கும் அக-புற  நுகர்வு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்கிறார்கள். தற்போதே உள்ளுர் பணக்காரர்களால் பல நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர்மார்க்கெட் வியாபாரம் சூடுபிடித்துள்ள பகுதிகளை ஆய்வு செய்து பாருங்கள் . அந்த நகரத்திற்கு சூப்பர் மார்க்கெட் வந்த பிறகு 50 சிறு கடைகளாவது மூடப்பட்டிருப்பதை காண முடியும். இந்த நிலையில் பன்னாட்டு  நிறுவனமான வால்மார்ட் அறிவித்திருக்கும்  பிரம்மாண்ட திட்டத்தை அனுமானித்தால்  ஒரு கடையே இந்த அதிரடியென்றால் பிறகடைகளும் சேர்ந்தால்..? மேலும் பல நிறுவனங்கள் இந்த வணிகத்தில் நுழைந்தால் (..ம்  ....இப்பவே கண்ணக்கட்டுதா...?) இந்திய சிறு வணிகச்சமூகமே அதகலமாகிப் போகும்.
    ஆனால் மத்திய அரசோ, ஒரே இடத்தில் உலகத் தரமான பொருள்கள் கிடைக்கும.;  1 கோடிப்பேருக்கு உடனடியாய் வேலை கிடைக்கும் . விவசாயிகள் கூடுதல் பலன்பெருவார்கள் என அம்புலி மாமா கதையைஅள்ளி விடுகிறது.  இதை சில காரியக்காரர்கள் அப்படியே  அனைவருக்கும் அஞ்சல் செய்கிறார்கள்  அப்பாவிகள் சிலரும் இந்த கனவு வலையில் கட்டுண்டு போகவும் விரும்புகிறார்கள்.
    இந்த காரியக்காரர்களான உயர்த்தட்டு வர்க்கத்தினர் மேலைய நாகரீகத்தில் மூழ்கிக் கிடப்பதால் இது போன்ற வசதிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது  அவர்களுக்குத் தேவையான அனைவருக்கும் தேவையானது என நம்ப வைக்கும் ஆளும் வர்க்கங்களின் கொள்கை பிரச்சாரகர்கள் இவர்கள் . எனவே இதை பொதுக் கருத்தாக்கிட முயல்கிறார்கள்.
    ஆனால் இத்தனையையும் மீறி இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது நம்பிக்கையளிக்கிறது. இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையில் இந்த திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் எனபிரதமர் பதறுவது ஏன்...?
    1917-ல் உலகின் முதன் முதலாய் முண்டாசுக் கவிஞன் பாரதி வர்ணித்தபடி ஆகா வென்றெழுந்த யுகப்புரட்சி மூலம் ரஷ்;யாவில் தொழிலாளி வர்க்க அரசு அமைந்தது. அதன் கொள்கையில் , மக்கள் நலனை முன்னிருத்திய திட்டங்கள் அனைத்தும் விடுதலைக்கு  போராடிய அனைத்து நாடுகளின் மக்களிடமும் பெரும் தாக்கத்தை, செல்வாக்கை உருவாக்கியது. நமது விடுதலைக் கவிஞன் பாரதியைப் போல அறிஞர்கள் பலரும் அந்த நாட்டை நேசித்தனர். உலக அரசியல் போக்கை புரட்டிப்போட்ட ரஷ்ய புரட்சியை வியந்து போற்றினார்கள். மக்களின் மனப்போக்கை அறிந்த விடுதலைபெற்ற தேசகத்தின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மக்களிடம் இருந்த சோசலிச தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சோசலிச கருத்துக்களை பேசியது; மட்டுமல்லாமல். சோவியத் அரசை பின்பற்றி பொதுத்துறைகளை கட்டமைத்தார் சமூக நலத்திட்டங்களை தீட்டினார். நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சிக்கு கால இலக்கை தீர்மானித்து அந்த திட்டத்திற்கான பெயரை சோவியத்தின் மாடலாய்  5 ஆண்டு திட்டம் எனபெயர் வைத்து இங்கிருப்பதும் சோசலிசத்தை உள்வாங்கியஅரசுதான் என மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.  அதன் ஒரு பகுதியாக உருவான திட்டங்களில் ஒன்றுதான் சிறு தொழில்களை உருவாக்க ஊக்குவித்தது அதை பாதுகாப்பது அதை வளர்ப்பது என அரசை செயல்படுத்தினார்.
    1980-வரை நேருவின் கொள்கை அடிப்படையிலேயே சிறு தொழில்களை  பாதுகாத்து அவற்றை பாதிக்கும் எதையும் அரசு ஊக்குவிக்காத நிலை இருந்தது.  எனவே தான் 100 கோடிக்குள் மூலதனம் போட்டு நடைபெறும் தொழில்களில் 100கோடிக்கு மேல் மூலதனம் போட தகுதியுள்ள தொழில் நிறுவனங்கள் நுழையக்கூடாது என சட்டப்பாதுகாப்பு இருந்தது.  அதனால் 1500 தொழில்களுக்கு மேல் நடைபெற்ற சிறு தொழில்கள் பாதுகாக்கப்பட்டது.     இதனால்  கோடிக்கணக்கான  குடும்பங்கள் அரசை எதிர்ப்பார்க்காமல் சுயமாய் தங்களின் வாழ்க்கைக்கு வழியை ஏற்படுத்தி கொண்டதுடன்  பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பையும் தந்தனர். 
இந்த நிலையில் தான் உலகை மிரட்டிச் சுரண்டுவதற்கு பெரும் தடையாக இருந்த சோசலிச சோவியத் யூனியன் 1989-90-ல் பின்னடைவை சந்தித்தது . இதனால் உற்சாகமடைந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்குமாய்  உருவாக்கி வைத்துள்ள  முதலாளிகளின் காரியக்கமிட்டியான அமெரிக்க தலைமையில் செயல்படும் ஜி 8 நாடுகள் சேர்ந்து உலகை கொள்ளையடிக்க ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு உலகமயம் எனப் பெயரிட்டார்கள்.   இதை உலக நாடுகளை ஏற்க வைக்க, அங்கம் வகிக்க  வலியுறுத்தி பல நெருக்கடிகளை செய்தன. இந்த திட்டத்தை  இந்திய பெரும் முதலாளிகளும் உற்சாகமாய் வரவேற்று இங்குள்ள அரசையும் ஏற்க வைத்தனர் . வேண்டாம் என வந்த எதிர்ப்புகளை கூட உலகமே இணைந்து வருகையில் நாம் தனித்து நின்றால்  ஊரும் உறவும் ஒதுக்கிவைத்துவிடும் என்றார்கள் . இந்தியபொருளாதாரத்தை பாதுகாக்கும்  பலமான அரண்களை உடைத்து நொறுக்கும்  பல நிபந்தனைகளையும் ஏற்றார்கள்.  சமூக நலத்திட்டங்களின் குரல்வலைகளை நெறித்தார்கள். உணவு மானியங்களில் கைவைத்தார்கள்.வேளாண் தொழிலுக்குள்ளும் இவர்களின் வேட்டைக்கு வழி விட்டார்கள். ஏற்றுமதி எனும் பெயரில் உணவு தானிய பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு இங்குள்ளவர்களை பசியின் கொடுமைக்கு பலிகொடுத்தார்கள்.   வாய்க்கும் வயிற்றுக்கும் போராடும்  நிலையில் மக்களை வைத்தால் தான் வசதிகள் கேட்டு  போராடமாட்டார்கள் எனும் சூத்திரத்தை கைக்கொண்டார்கள் . ஆனால் மறுபுறம் 2008 தொடங்கி 2010- வரை மட்டும் இந்திய மற்றும் அந்நிய பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் என்ற வகையில் மட்டும்  14,28,028 ரூபாயை வாரி வழங்கினார்கள். உலக மயத்தை ஆதரித்த பலனை இவர்களே தொடர்ந்து பெற்று வருகிறார்கள். மறுபுறம் தொடர்ச்சியாக ஆண்டு வந்த காங்கிரஸ் பி.ஜே.பி அரசுகளால் வாழ்க்கையே நொறுங்கிப் போய் உருக்குலைந்து போன சாதாரண மக்களுக்கான , மீதம் இருக்கும் நலத்திட்டங்களையும்  பறித்துக்கொள்ள இவர்கள் தயங்கவே இல்லை. இதனால் தான்  ' அன்றைக்கே அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சந்தையாக மூன்றாம் உலக நாடுகளை மாற்றும் சதி இது . இவர்கள் போடும்  நிபந்தனைகளை நாம் ஏற்றால் நமது நாடு  கடும் நெருக்கடியை சந்திக்கும் எனவே உலக மயத்தில் நாம் இணைய தேவையில்லை'  என இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்பை மீறியதன் விளைவுதான் இன்று  நாடு சந்திக்கும் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.  நாடு  ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    இந்தியாவை  பொறுத்தவரை  பொதுத்துறையை பாதுகாப்பு சுயாதிபத்தியம் எனும் வார்த்தைகள் ' அவுட்டாப் பேஷன்' -ஆகிப்போனதால் இடதுசாரிகளின்  குரல்கள் எடுபடவே இல்லை. அதனால்தான் சரிந்து போன அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்தியாவிற்;கு  நலன் பயக்கும் என நமது பிரதமரே  பேசும்  தைரியம் பெற்றார். சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4கோடி குடும்பங்கள் அதில் பணிபுரிவோர்  என சுமார் 25கோடி  குடும்பங்களை பன்னாட்டு  நிறுவனங்களுக்கு பலி கொடுக்க நினைக்கிறார்.
    அரசின் இந்த மக்கள் விரோதப்போக்கு குறித்து உரையாடும் போதும் தவறாமல் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. அதாவது இந்த சிறுவணிகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் தான் மேளாண்மை செய்கிறது என்றும் அந்த சமூகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதுதான் . இது ஒரு சரியானவாதமில்லை. இவர்கள் சொல்லும் சமூகம் மட்டுமல்ல இதர சமூகங்களும் இந்த தொழிலில் உள்ளது. அதில் அவர்கள்; குறிப்பிடும் அந்த சமூகம் கூடுதலாக உள்ளது என்று வேண்டுமென்றால்; கூறமுடியும். அடுத்து இது அவர்களுக்கு மட்டுமான நெருக்கடி –
என்றுசொல்லலப்படுவதும் சரியான விவாதமல்ல குறைந்த வருமானம் உள்ள ஊழியர்கள், தொழிலாளர்கள், முறைசாரா பணியாளர்கள் விளிம்பு நிலை மக்கள் என தங்கள் வருமானத்திற்குள் வாழ்ந்துவிட போராடி வரும் மக்களுக்குஅவர்களின் வருமானப் பற்றாக்குறையை இட்டு நிரப்பும் கடன் உதவியை இந்த வணிக சமூகமே உதவி வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள தேனீர்கடை, மளிகைக்கடை, அரிசிக்கடை என அத்தியாவிசய பொருள்கள்  விற்பனைசெய்யும் கடைகளில் கடன் வாங்கியவர்களின் விபரம் கடன்பாக்கி விபரம்  என குறித்து வைக்கப்படும் நோட்டு இல்லாத ஒரு கடையை நம்மாள் பார்க்க முடியாது. 'வால்மார்ட்டிடம் இந்த உதவியைப் பெறமுடியுமா..? எனவே இந்த திட்டம் அமுலாக்கப்படும் போது மேற்கண்ட குறைந்த வருவாயுள்ள மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மை உணரப்பட்டதால்தான் இந்த திட்டத்திற்கு; அனைத்து பகுதியிலும் எதிர்ப்பு வலுக்கிறது.
    இந்த எதிர்ப்பின் வெக்கை தாளாமல்தான் மத்திய அரசு இந்த திட்டத்தை தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதாய் அறிவித்துள்ளது. கைவிடப்பட்டதாக அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இது பதுங்கிப் பாயும் அரசியல் சதி ஒருபக்கம்  பொதுக்கருத்தை  அறிந்தே அரசு செயல்படும் என அறிவித்துக் கொண்டே எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் பேரங்கள் மூலமான ஆதரவினைப் பெற்று  நினைத்த திட்டங்களை அமுலாக்கி விடுவது காங்கிரஸ், பி.ஜே.பி அரசுகள் கடந்த காலங்களாய் கடைபிடித்து வரும் ஆட்சி வரலாறு.. அதற்கு பொதுத்துறைப்பங்குகளில் அன்னிய மூலதனப் பங்குகளை அதிகரித்தது. அணு ஒப்பந்தம் , அரசு ஊழியர் பென்சன் என ஆயிரம் உதாரணங்கள் உள்ளது. இதில் ஆளும் கட்சி எதிர்கட்சியென  வித்தியாசம் ஏதுமில்லை. அரசின் மக்கள் விரோதத்திட்டங்களைக் கூட அடையாளப் பூர்வமாய் நடத்துவதும் அந்த போராட்டகளினூடக அமெரிக்கத் தூதர்களுடனான சந்திப்புகளை நடத்துவதும் பி.ஜே.பி-யின் வழக்கமாகிவிட்டது. ( இது சும்மா தமாசு நீங்க பயந்துட்டீங்களா.... அய்யோ....அய்யோ...)
    இந்த நிலையில் நாட்டின் தொழில்களை சுயசார்பு பொருளாதாரத்தை, வேளாண் தொழிலை ,  நாட்டின் வளங்களை , நமது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டத்தை கொள்கைப் பூர்வமாக நம்மோடு இணைந்து நிற்கத் தயாராயுள்ள அமைப்புகளுடன் இணைந்து நாமே போராடித்தீரவேண்டும.; அவர் வந்தால்.... இவர் வந்தால்..... என்கிற எதிர்பாhப்;பும,; நம்பிக்கையும,; காத்திருப்பும் நமது இழப்புகளை அதிகமாக்கும் போராட்டங்களின் மூலமே நமக்கான  பாதையை நமது முன்னோர்கள் கண்டடைந்தனர். ஆந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சிதான் நாம.; நாலுபேர் வாழ நாட்டை நடத்துவோரிடமிருந்து மீட்டு நமக்கான தேசமாய் நமது நாட்டைமீட்டெடுக்கும் நேரமிது. நமது வீட்டு ஜன்னலை அதிh வைக்கும் 'வால்மார்ட்டை' கைப்பற்றுவோம் என்ற குரல்களின் வெடியோசை போராட்டம் துவங்கி விட்டது என்பதை முரசறிவிக்கிறது. உடனே முடிவுசெய்ய வேண்டிய தருணம் இது. நாம்  பங்கேற்ப்பாளரா...? பார்வையாளரா..?
            மங்களக்குடி நா.கலையரசன்.-10.12.2011