Saturday, August 8, 2020

மன்னியுங்கள் மருத்துவரே


மன்னியுங்கள் மருத்துவரே
---------------------------------------------
இருமலும் தும்மலும்
இல்லாத பிணம்
நோய் பரப்பும் எனச்சொல்லி
கூடி கல்லெறிந்த
கூதரைகூட்டத்தை
அறிவுச் சமூகம் என
அறிவு ஏற்க மறுக்கிறது

பகுத்தறிவு பெரு நதியாய்
புத்துயிர் த தமிழகத்தை
மூடர் கூட்டத்தல இடமாய்
மாற்றிட முயல்வோரை
மன்னியுங்கள் மருத்துவரே

பெரியார் எனும் பெரு நெருப்பால் 
பேரொளி பெற்றவர்கள்
 அதிகாரம் பறிக்க
அறிவை தொலைத்து
காரிருளின்கால் இடையே
கவிழ்ந்துகிடைப்பதற்காக
மன்னியுங்கள் மருத்துவரே

இறை வைப்பவனே
இறைவனாகக் கொள்கிறது
விலங்குகள்
பல உயிர்களை காப்பதற்காக
உயிர் தந்த உம்மை
உதறித் தள்ளிய தற்காக
மன்னியுங்கள் மருத்துவரே

இருள் அகற்றி ஒளி தர
தன்னுயிர் தந்து மரணிக்கும்
தீக்குச்சி போல
பலருக்கு உயிர் தந்து
உயிர் நீத்தீர்
மாமனிதர் நீர
பகுத்தறிவு பயிரை
பாதுகாக்கும்
நல்லவர் உலகம் தம்
நினைவில் என்றும்வைத்திருக்கும்
நீடுவாழ் வீர் சென்று வாருங்கள்
சைமன் மருத்துவரே.

...மங்கலக்குடி நா.கலையரசன்

எழவு வீட்டிலும் களவு


எழவு வீட்டிலும் களவு
-----------------------------------------------
குலைக்கும் நாயின் குரல் கேட்டு
நள்ளிரவாயினும்
எட்டிப்பார்த்து கதவ டைக்கும்
வீட்டில் உரிமையாலனாய்
இல்லை நம்மை ஆள்பவர்கள்

உலக நாட்டாமை
டிரம்ப் பை வரவேற்கும்
உற்சாக ஊலைகளின்
ஓங்கார சத்தத்தால்
யுவானின்காது கிழித்த
கோரனாவின் சத்தத்திற்கு
செவி தர மறுத்தார்கள்

தாளிடாமல் கிடந்த
கதவுகளின் ஊடாய்
கோரானா
ஊருக்குள் வந்து
உயிர் கேட்டு நிற்கிறது

நின்று நிதானமாய்
கொன்று தொலைத்த பின்
உள்ளேயே இருங்கள் என
உத்தரவு போட்டு
உபதேசம் செய்கிறது அரசு

எங்கு காணினும்
பயத்தை விட பசியே
பரவியது வேகமாக
ஆள்வோரி டமிருந்து 
அறிவுரைகள் மட்டுமே
அலை அலையாய் வருகிறது

ஊரடங்கில் முடங்கி
உழைப்பை விற்று
உணவு தேட வழி இன்றி
உயிர்நாடி காக்க
மோடியை நாடினோம்

30 சதம் சிலர் ஊதியத்தில்
தொகுதிகளுக்கான பெருநிதி
பஞ்சப்படி ஓய்வூதியம் என 
பல பக்கங்களிலும்
பரிமுதல் செய்தாலும்
ஏந்திய எங்கள் கரங்கள்
வெறும் கைகள் ஆகவே
காத்திருக்கின்றன

நண்பன்குசேலனின்
ஏழ்மை நிலை உணர்ந்து
கேட்காமலேயே பெருஞ்
செல்வங்களைத் தந்தானாம்
கண்ணன்
அவனின் பக்தன் என்போர்
அவர்களுக்கு நண்பரான
வரி கட்டாத வனுக்கும் 
வாங்கியதை கட்டாத வணுக்கும்
கஜானாவை திறந்து விட்டனர்

பசி மக்களின் பக்கம் வந்து
நிற்க வேண்டியவர்கள்
கொலைக்களத்தின் நடுவிலும்
கல்வியை வேலைவாய்ப்பின்
கதவடைத்து வைக்கவும்
பொதுத்துறையை விற்றிட
புது திட்டமிடவும் 
சதித் திட்டம் போடுகிரார்கள் 

எழவு வீட்டிலும்
களவு செய்வதுதான்
பாசிசத்தின்
பெரும் குணமோ.....

        மங்கலக்குடி நா. கலையரசன்