Sunday, August 31, 2025

போரற்ற உலகு


போரற்ற உலகு

கந்தளான உடை
 ஏவுகணை சிதறல்களால் 
கன்னங்களில் 
 கசியும் குருதியுடன்
 தட்டேந்தி உணவுக்காய் 
இறஞ்ச்சி நிற்கும் குழந்தைகள் கண்களுக்குள் வந்து
 கதற வைக்கிறார்கள்

மின்னல் ஒளியில் வரைந்து வைத்த ஓவியமாய் 
விண்ணுயிர்ந்து நின்ற
கான்கிரீட் மாளிகைகள் 
குப்பையான கொடூரம்

பாலை வனமெங்கும் 
மரணக் குரல்கள்
பசியால் தாகத்தால் 
பிஞ்சுகளின் கதறல்கள்

 அதிகாரப் பெரு அரிப்பால் பிள்ளைக்கறி தின்றேனும் எல்லைகளை விரிவாக்க 
எத்தனை கொலைகள் 
எத்தனை பேரழிவுகள்

 மனித ரத்தம் குடித்தேனும் 
மன்னாளும் பேராசை 
பிணம் தின்னி கழுகுகளாய் 
மாறும் பேரவலம் 

ஆதிக்க வல்லூர்களின் அடியாள்களாய் மாறி 
முகவரி தந்தோரை 
முதுகில் குத்தும் 
துரோக வடிவான 
யூதாஸாக 
இஸ்ரேலின் நிதன்யாகூ 

ஆரிய பாசிச தேடலில் அனாதையானவர்களுக்கு
 நிலம் தந்து ஆதரித்தவர்களை நிர்மூலமாக்க துடிப்பது தான்
 யூத தந்திரம் எனில்_ 
ஹிட்லர் தேடி அடித்தது சரிஎன்றாகாதா 
இனி ஒரு முறை 
அகதியானால்
 உம்மை திரும்பிப் பார்க்க உலகில் நாதி இருக்காது 

ஈவிறக்கமற்ற உங்கள் 
நரவேட்டைதடுக்க 
ஈரான் தலையிட்டது வடகொரியாவும் சீனாவும் வருவோம் என்றது 
மோதிப் பார்த்து நிலை உணர்ந்து சமரசம் என்றது அமெரிக்கா
இருந்தென்ன இருபுறமும் மரண ஓலம்தானே 

அதிகாரத் திமிராலும் 
அடிமை புத்தியாலும் ஆள்வோர் அளவு மீரலுக்கு அணை போட கூடுவோம்  

இலங்கை அனுபவம்
  எதிரே இருக்கு
உலக மக்கள் 
 உறவு நமக்கு .வா
போரற்ற உலகை 
பொதுமை செய்வோம்...

Saturday, April 12, 2025

கவிதை


சன்னல் இருக்கை 
__________________________

வைக்கோல் போருக்கு
கால்கள் முளைத்ததுபோல 
ஊர்ந்து வரும்பேருந்தை
 தேரென வியந்த 
பாலப்பருவமது 

பேருந்து பயணம் 
பெருங் கனவாய் 
வந்து போகும் 
சன்னலில் முகம் பதித்து
 மனதை வெளியே விட்டு
வெறிப்பதை விட வேறென்ன... 

தலையை வெளியே காட்டாதே
 தந்தையின் எச்சரிக்கை 
கையை வெளிக்காட்டுவது யார் 
ஓட்டுனர் குரல் -ஓடிவரும்
எந்த குரல்களையும்
காது வழி நுழையாமல் 
காற்றள்ளிப் போகும்

 காற்று வந்து மல்லுக்கட்டும் 
முகமறைந்து சினம் காட்டும்
இருந்தென்ன 
காற்றுக்குள் நுழைந்து
கரைந்து விட 
மனசெல்லாம் 
மலர்ந்து விரியும் 

பனை மரம் வேப்பமரம் 
வயல் வரப்பு என
என்னைத் தவிர அனைத்தும் 
பின்னோக்கி ஓடி 
கண்ணாமூச்சி ஆடும்


 நெஞ்சத்தில் துள்ளளாடும் 
நினைவுகளை கிளறிவிட்டு 
ஆர்வம் கண்களில்  ஊர
 சன்னலோரம் பார்த்தேன் 

அண்டை அயலார் மறந்து 
அலைபேசி திரைக்குள்
 புதைந்தபடி பயணிக்கும் 
ஒரு பாலப் பருவத்தினன்...
_மங்கலக்குடி நா.கலையரசன்_

ஆவாரம்பூ


அரிதாரம் கலைந்தது
___________________________

பாசிசத்தால் நெய்யப்பட்ட 
இந்துத்துவ அரசியலை 
தரித்துக்கொண்டு
அலையும் போதும்...

ராஜா வேஷம் போட்டு 
காவித் துணி மிளிர
ராம நாமம் பாடி 
இந்து தேசம் இதுவென 
எகிரிப் பேசித்திரிந்த போதும்..


இல்லாரும் உடையாரும் 
இல்லாத ராஜ்ஜியமே
இந்து ராஜ்யம் என 
கனவை விதைத்து 
அதிகாரம் வந்ததும்

குடிமக்கள் வாழ்க்கையை 
குதறிப் போட்ட போதும்...
குஜராத்தின் குடிமக்களையே
கொன்று குறுதினக்கி குடித்து 
 கைகட்டி ரசித்த போதும்...


இந்து மத பாசம் 
அரியணைக்காண வேஷம் .என 
வரலாற்றுப் பொய்களை 
அம்பலப்படுத்தி எதிர்த்தோரை
அடக்கியும் .அழித்த போதும்...


ஏழு சகோதரிகளில் 
இளைய சகோதரியாம் 
மணிப்பூர் மலை மக்களை  
நர வேட்டையாடியபொதும்...


நாலு பேருக்கு நாட்டை விற்று
 நட்டாற்றில் இந்துக்களை தள்ளி 
நாக்பூருக்கு சேவை செய்து 
நத்தி பிழைத்த போதும்...


நினைத்துப் பார்த்தீரா 
உம்மையும் 
இந்து மதம் தந்த 
சூத்திர பட்டம் 
துரத்தி வரும் என்று...

 _மங்கலக்குடிநா.கலையரசன்_
Show quoted text

கவிதை


சன்னல் இருக்கை 
__________________________

வைக்கோல் போருக்கு
கால்கள் முளைத்ததுபோல 
ஊர்ந்து வரும்பேருந்தை
 தேரென வியந்த 
பாலப்பருவமது 

பேருந்து பயணம் 
பெருங் கனவாய் 
வந்து போகும் 
சன்னலில் முகம் பதித்து
 மனதை வெளியே விட்டு
வெறிப்பதை விட வேறென்ன... 

தலையை வெளியே காட்டாதே
 தந்தையின் எச்சரிக்கை 
கையை வெளிக்காட்டுவது யார் 
ஓட்டுனர் குரல் -ஓடிவரும்
எந்த குரல்களையும்
காது வழி நுழையாமல் 
காற்றள்ளிப் போகும்

 காற்று வந்து மல்லுக்கட்டும் 
முகமறைந்து சினம் காட்டும்
இருந்தென்ன 
காற்றுக்குள் நுழைந்து
கரைந்து விட 
மனசெல்லாம் 
மலர்ந்து விரியும் 

பனை மரம் வேப்பமரம் 
வயல் வரப்பு என
என்னைத் தவிர அனைத்தும் 
பின்னோக்கி ஓடி 
கண்ணாமூச்சி ஆடும்


 நெஞ்சத்தில் துள்ளளாடும் 
நினைவுகளை கிளறிவிட்டு 
ஆர்வம் கண்களில்  ஊர
 சன்னலோரம் பார்த்தேன் 

அண்டை அயலார் மறந்து 
அலைபேசி திரைக்குள்
 புதைந்தபடி பயணிக்கும் 
ஒரு பாலப் பருவத்தினன்...
_மங்கலக்குடி நா.கலையரசன்_

Tuesday, October 15, 2024

சுவியம் சிறுகதை குறித்து

புத்தகத்தின் பெயர்: சுவியம் (சிறுகதைகள்)

ஆசிரியரின் பெயர்: மங்களக்குடி நா. கலையரசன் 

பதிப்பகம்: மாற்று ஊடக மையம் 

பக்கங்கள்‌:  168.,  விலை: 175

நான் எந்த கதையை எழுதுவது? என் சிறு வயதில்  பாட்டியிடம் கேட்ட மகிழ்ந்து மாயாஜாலக் கதைகளை எழுதுவதா, அல்லது  என்னைச் சுற்றி நான் பார்த்த, கேட்ட கதைகளை எழுதுவதா என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்த மார்க்சிம் கார்க்கிக்கு அவர் கைபட்டு அழுக்கடைந்த காகிதம் பதிலாக அமைந்தது. ஆம், அவர் எழுதியது அழுக்கு படிந்த ரஷ்ய நாட்டு உழைக்கும் மக்களின் கதைகள்.  அவர்கள் படும் பாடுகளை கதைகளாக மாற்றி தன் சமூகத்தின் அசல் முகத்தினை வெளிப்படுத்துகிறார்.  அவர் எழுதிய அசல் இன்று வரை ரஷ்ய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் அறிமுகம் செய்யப் போகும் சுவியம் என்கிற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் தோழர் நா.கலையரசன் அவர்கள் மாயாஜாலக் கதைகளை சொல்லி போலி மயக்கத்தில் மக்களை வைத்திருக்க விரும்பவில்லை.  அதற்கு மாற்றாக மக்களை அவர்களின் அறியாமை குறித்தும் அவர்களின் உரிமைகள் குறித்தும் சிந்திக்க வைத்திருக்கிறார். நம் வாழ்வில் நாம் அன்றாடம்  பார்க்கத் தவறிய, பார்த்தும் பார்க்காமல் செல்ல எண்ணுகின்ற பல விஷயங்களை உண்மையின் மிக அருகில் நின்று பேசுகின்றன இவரின் கதைகள். இப்புத்தகத்தில் மொத்தமாக பதினோரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இப்பதினோரு கதைகளின் கதைக்கருக்களும் நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற நிகழ்வுகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. “பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பெண்களால் தங்களது தலைவிதியை தங்களது விருப்பப்படி மாற்றி அமைத்துவிட முடியும். அப்படி அவர்கள் உருவாக்க நினைக்கும் புதிய விதியை அவ்வளவு எளிதாக இப்பொதுசமூகம் அங்கீகரிக்காது” என்பதை ‘புது விதி’ என்கிற கதை நம்மிடத்தில் எடுத்துக்காட்டுகிறது. “அனைத்து உயிர்களையும் நேசிக்கிற மனிதம் மகத்தானது‌”. அதைத் திரும்பத் திரும்ப இன்று இணைய வழியில் இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிற இளம் தலைமுறை பிள்ளைகளிடத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடே ‘உறவுக்காரி’ என்கிற கதை. குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில், கூடி வாழ்தளின் அவசியத்தையும் அதன் இன்றைய தேவையையும் ‘சுவியம்’ என்கிற கதையை சுவைக்கும் போது நாம் உணர முடியும்.  “இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?” இந்த வாசகம் சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், இன்றைய இனைய காலத்திலும் சாதிய பாகுபாடுகளும் சாதியை ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுப்பதற்கல்ல. இப்புத்தகத்தில் வருகின்ற “உயிர்ச்சொல், அழுக்கு” போன்ற கதைகள் கொஞ்சம் நம் காலத்திற்குப் பின்னால் செல்லக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் அந்தக் கதைகள் சொல்லக்கூடிய சாதியை ஏற்றத்தாழ்வுகளும், இழிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. அதிகாரம் என்பது ஊரை ஏய்த்துப் பிழைப்பதற்காக ஒருவருக்கு வழங்கப்படுவது அல்ல. அதைக் கைகொண்டு அதன் வழியே மக்களுக்கு நீங்கள் ஆற்றக்கூடிய சேவையின் வழியே தான் மக்கள் உங்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அதிகாரம் உங்களை விட்டுச் சென்றாலும் மக்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை “கர்ண தாண்டவம்” என்கிற கதையை வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். இப்படியாக புத்தகம் முழுவதும் வாசிப்பவர்கள் கடந்து செல்ல, கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் தாராளமாக படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளது.  அதை கிள்ளி எடுப்பதும், அள்ளி எடுப்பதும் வாசிப்பவர்களின்  சிந்தனையைப் பொறுத்தது…

நன்றி!

அன்புடன்: வா. ஸ்டாலின்

Sunday, August 11, 2024

சுவியம் புத்தக விமர்சனம்

புத்தகத்தின் பெயர்: சுவியம் (சிறுகதைகள்)

ஆசிரியரின் பெயர்: மங்களக்குடி நா. கலையரசன் 

பதிப்பகம்: மாற்று ஊடக மையம் 

பக்கங்கள்‌:  168.,  விலை: 175

இப்புத்தகத்தில் மொத்தமாக பதினோரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இப்பதினோரு கதைகளின் கதைக்கருக்களும் நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற நிகழ்வுகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.

“பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பெண்களால் தங்களது தலைவிதியை தங்களது விருப்பப்படி மாற்றி அமைத்துவிட முடியும். அப்படி அவர்கள் உருவாக்க நினைக்கும் புதிய விதியை அவ்வளவு எளிதாக இச்சமூகம் அங்கீகரிக்காது” என்பதை ‘புது விதி’ என்கிற கதை நம்மிடத்தில் எடுத்துக்காட்டுகிறது.

“அனைத்து உயிர்களையும் நேசிக்கிற மனிதம் மகத்தானது‌”. அதைத் திரும்பத் திரும்ப இன்று இணைய வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிற இளம் தலைமுறை பிள்ளைகளிடத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடே ‘உறவுக்காரி’ என்கிற கதை.

குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில், கூடி வாழ்தளின் அவசியத்தையும் அதன் இன்றைய தேவையையும் ‘சுவியம்’ என்கிற கதையை சுவைக்கும் போது நாம் உணர முடியும். 

“இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா” இந்த வாசகம் சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம் ஆனால் இன்றைய இனைய காலத்திலும் சாதிய பாகுபாடுகளும் சாதியை ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுப்பதற்கல்ல. இப்புத்தகத்தில் வருகின்ற “உயிர்ச்சொல், அழுக்கு” போன்ற கதைகள் கொஞ்சம் நம் காலத்திற்குப் பின்னால் செல்லக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் அந்தக் கதைகள் சொல்லக்கூடிய சாதியை ஏற்றத்தாழ்வுகளும், இழிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது.

அதிகாரம் என்பது ஊரை ஏய்த்துப் பிழைப்பதற்காக ஒருவருக்கு வழங்கப்படுவது அல்ல. அதைக் கைகொண்டு அதன் வழியே மக்களுக்கு நீங்கள் ஆற்றக்கூடிய சேவையின் வழியே தான் மக்கள் உங்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அதிகாரம் உங்களை விட்டுச் சென்றாலும் மக்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள் என்பதை “கர்ண தாண்டவம்” என்கிற கதையை வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

இப்படியாக புத்தகம் முழுவதும் வாசிப்பவர்கள் கடந்து செல்ல, கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் தாராளமாக படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளது.  அதை கிள்ளி எடுப்பதும், அள்ளி எடுப்பதும் வாசிப்பவர்களின்  சிந்தனையைப் பொறுத்தது…

நன்றி!

அன்புடன்: வா. ஸ்டாலின்