Saturday, April 12, 2025

ஆவாரம்பூ


அரிதாரம் கலைந்தது
___________________________

பாசிசத்தால் நெய்யப்பட்ட 
இந்துத்துவ அரசியலை 
தரித்துக்கொண்டு
அலையும் போதும்...

ராஜா வேஷம் போட்டு 
காவித் துணி மிளிர
ராம நாமம் பாடி 
இந்து தேசம் இதுவென 
எகிரிப் பேசித்திரிந்த போதும்..


இல்லாரும் உடையாரும் 
இல்லாத ராஜ்ஜியமே
இந்து ராஜ்யம் என 
கனவை விதைத்து 
அதிகாரம் வந்ததும்

குடிமக்கள் வாழ்க்கையை 
குதறிப் போட்ட போதும்...
குஜராத்தின் குடிமக்களையே
கொன்று குறுதினக்கி குடித்து 
 கைகட்டி ரசித்த போதும்...


இந்து மத பாசம் 
அரியணைக்காண வேஷம் .என 
வரலாற்றுப் பொய்களை 
அம்பலப்படுத்தி எதிர்த்தோரை
அடக்கியும் .அழித்த போதும்...


ஏழு சகோதரிகளில் 
இளைய சகோதரியாம் 
மணிப்பூர் மலை மக்களை  
நர வேட்டையாடியபொதும்...


நாலு பேருக்கு நாட்டை விற்று
 நட்டாற்றில் இந்துக்களை தள்ளி 
நாக்பூருக்கு சேவை செய்து 
நத்தி பிழைத்த போதும்...


நினைத்துப் பார்த்தீரா 
உம்மையும் 
இந்து மதம் தந்த 
சூத்திர பட்டம் 
துரத்தி வரும் என்று...

 _மங்கலக்குடிநா.கலையரசன்_
Show quoted text

No comments:

Post a Comment