Tuesday, March 22, 2011

இளமையையே பணயமாய்

நீ அருகில் இல்லாத 
வாகனப்பயணம் 
கால் நடைப் பயணத்தை விட 
களைப்பாய்  இருக்கிறது 

நீ உடன்  இல்லாத 
ஒய்வரை 
நெருக்கடியாய் இருப்பினும் 
வெறுமையாய்  இருக்கிறது 

செவிகிரங்குமுன் 
செல்ல குரல் இன்றி 
அருகாமை  ஓசைகள் 
அந்நியமானது

அழகு முக அழுத்தமின்றி 
இதய துடிபோசை
இடைவெளி  விடுகிறது  

உன் சுவாசம்  கலக்காத 
ஆக்சிசனை   ஏற்க்க  
நுரையீரல்  திணறுகிறது 

இருந்தும்   என்ன செய்ய ..?
பணவரவற்ற  எனக்கு 
சன  உறவும் 
மண உறவும் 
பாரமாகிப்போனது

அடிவயிர் எரியும் 
பசி நெருப்பால் நம் 
அன்பின்  அடர்த்தி  
குறைந்திட  கூடாதென 
விரைந்தெடுத்த முடிவிது

உடல்  அணு  அனைத்திலும்  
ஊடுருவி  நின்ற  உன்னை  
விலகி  வாழ  வருமென  
கனவுகூட   சொன்னதில்லை  

பரம்பரை  ஆட்சியாய் 
பத்திரபடுத்துவோர்
தருத்திர சரித்திரத்தை   
திருத்திட  திறனின்றி 
பொருத்துவாழ போதிக்கிறார்

அவ்வபோது  வரும் 
ஐந்தாண்டு   திட்டங்களும் 
ஆன்டைகளையும்
அம்பானிகளையுமே  
அரவணைத்துகொண்டது

அபயக்கரம்  நீட்ட  
எவருமற்ற  நிலையில் 
ஆண்டு  தவணையில்  
அடுத்த நாடே  எனக்கு 
ஆதரவு  தந்தது  

வறுமை  தொலைத்து  
வளமை பெற  நம் 
இளமையை  பணயம்  வைத்த 
இறுதி  போர் இது  
இனியவளே   காத்திரு  

இறுதி காலம்  வரை 
அருகிருப்பேன்  எனும்  
உறுதிமொழி   காத்திட 
ஒப்பந்த நாளின்  
கடைசி   நிமிடத்தில்   
காத்திருகிறது   என் மனசு .......

 






No comments:

Post a Comment