Sunday, October 30, 2011

அவர்களைத்தெரியும்


தெரியும்
அவர்களுக்கு எங்களையும்
எங்களுக்கு அவர்களையும்
நன்றாகவே தெரியும்

எங்களின் தேவைகளை
அவர்களின் குரல்களே
உரத்துப் பேசியது.

வேதனைகளை வெளிப்படுத்தி
எங்கள் முனங்கள்களை
முழக்க மாக்கியவர்கள்

அவர் விழிகள் தந்த
வெளிச்சத்தில் தான் எங்கள்
வழியினை கண்டுணர்ந்தோம்

எங்கள் வலிகண்டு
துடித்தவர்கள்
துவழும் பொழுதுகளில்
தோள் தந்தவர்கள்


எல்லாம் தெரியும்
நன்றாகவே தெரியும்

அதிகாரம் பிடிக்கும்
அவசரத்தேவைக்காய்
அருகில் வந்து போகும்.
இவர்களையும் தெரியும்

வறுமைச் சாபம் தந்து
வசதி வரம் பெற்றவர்கள்
இவர்களின் முக விலாசம்
முழுவதுமாய் தெரியும்

ஜாமினுக்கும் சம்மனுக்கும்
கோர்ட்டில் கிடப்போர்க்கு
ஓட்டுப்போட்டது ஒவ்வாதென
உறுதியாய் தெரியும்
வறுமை….
அகழி வீழ்ந்த எங்கள்
வாழ்க்கை மீட்கும் போரில்
செலாவணி ஆயுதத்தின்
தாக்குதலால் தடுமாறி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறோம்

அடுத்தமுறை
வெல்வோம் எனும்
நம்பிக்கையோடு…..

No comments:

Post a Comment