_____________________
குடும்பங்கள் ஒவ்வொன்னுக்கும்
குல சாமிகள் இருக்கு
தெருவுக்கு ஒரு அம்மன் கோயில் கட்டாயமா இருக்கு
ஊருக்குள்ள அய்யனாரும் மகாலிங்கமும் இருக்கு
ஊரைச்சுத்தி-காளியம்மன் .
மதுரை வீரன். வழிவிட்டான் சாமிகளேலாம் எங்களுக்கு
பாதுகாப்பா இருக்கு
தூரம் தொலைவு போய் கும்பிட பழனி மலை இருக்கு
இப்படி சொந்த சாமி
வகை வகையா
நூறு சாமி இருக்க
ஓஞ்சாமிய கொண்டு வந்து
எங்க மேல திணிக்கே..
எல்லாரும் சேர்ந்து வணங்கும் சாமி எங்கே இருக்கு
தனித்தனியா சாமிகளும் சடங்குகளும் இருக்கு-இதுல
ஒன்ச்சாமிய பாக்க எனக்கு
தாக்கீது எதுக்கு ...
கோயில் கட்டும் ஆசையெல்லாம் பக்தருக்கு வரலாம்
அனுமதிதாரதுமட்டும் தான்
அரசாங்க வேலை
ஆராதனை மணி ஆட்டுவது வேண்டாத வேலை..
எங்க சேலைக்காரி அருளைப் பெற உங்கள் சேணைஎல்லாம் வருமா சடை முனிக்கு படையல் வச்சு சங்கரமடம் தருமா
அலகு குத்தி நேர்த்தி வைக்க அக்ரஹாரம் வருமா?
நாங்கள் மட்டும் எதுக்கு
விலகி நில்லு ஓரமா...
அப்போ நீ பேசுற பாசையவே என்னையும் பேசச் சொன்னே
.அப்புறம்
நீ சாப்பிடும் உணவுபோல
என்னையும் சாப்பிடச் சொன்னே
இப்ப ஓஞ்சாமிய சேந்து கும்பிட
அழைப்பு வேற தார ....
அடுத்தவன் கோயில இடிக்கிறது அதுல கோயிலை கட்டுவதும் பொழப்பத்த வேலை
ஜனங்கள் நல்லா வாழ்ந்தாதானே சாமிகூட வாழும்...
அஞ்சு வருஷம் ஆளத்தானே
ஓட்ட நாங்க போட்டோம் .எங்க அடையாளத்தை மாத்திடவா உன்கிட்ட வந்து கேட்டோம்
அடி மேல அடி அடிச்சா
அம்மிகூட நகரும் -நாங்க
சேந்து திருப்பி அடிச்சா- உன்
அதிகாரமே தகரும் ...
_மங்கலக்குடி நா.கலையரசன்_
(பாபர் மசூதி இடித்த இடத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பிஜேபி மோடி அரசு நடத்திய 22/1/2024 அன்று எழுதிய கவிதை)